முகப்பு |
வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் |
81. குறிஞ்சி |
இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி, |
||
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப் |
||
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்; |
||
உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்- |
||
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக் |
||
கடலும் கானலும் தோன்றும் |
||
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே. |
உரை | |
தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது. -வடம வண்ணக்கன் பேரிசாத்தன் |
159. குறிஞ்சி |
'தழை அணி அல்குல் தாங்கல் செல்லா |
||
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக, |
||
அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக் |
||
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின; |
||
யாங்கு ஆகுவள்கொல் பூங்குழை?' என்னும் |
||
அவல நெஞ்சமொடு உசாவாக் |
||
கவலை மாக்கட்டு-இப் பேதை ஊரே. |
உரை | |
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது; உயிர் செல வேற்று வரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தன். |