முகப்பு |
ஓரி |
100. குறிஞ்சி |
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் |
||
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும் |
||
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென, |
||
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும் |
||
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் |
||
பாவையின் மடவந்தனளே- |
||
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே. | உரை | |
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர் |
199. குறிஞ்சி |
பெறுவது இயையாதுஆயினும், உறுவது ஒன்று |
||
உண்டுமன் வாழிய-நெஞ்சே!-திண் தேர்க் |
||
கை வள் ஓரி கானம் தீண்டி |
||
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல் |
||
மை ஈர் ஓதி மாஅயோள்வயின், |
||
இன்றை அன்ன நட்பின் இந் நோய் |
||
இறு முறை என ஒன்று இன்றி, |
||
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே. | உரை | |
தோழி செறிப்பு அறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - பரணர் |