முகப்பு |
செவிலி |
15. பாலை |
பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு |
||
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய |
||
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல, |
||
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல் |
||
சேயிலை வெள் வேல் விடலையொடு |
||
தொகுவளை முன்கை மடந்தை நட்பே. | உரை | |
உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தோடு நின்றது. -ஒளவையார் |
44. பாலை |
காலே பரி தப்பினவே; கண்ணே |
||
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே; |
||
அகல் இரு விசும்பின் மீனினும் |
||
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே. | உரை | |
இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது. - வெள்ளிவீதியார் |
84. பாலை |
பெயர்த்தனென் முயங்க, 'யான் வியர்த்தனென்' என்றனள்; |
||
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே- |
||
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் |
||
வேங்கையும் காந்தளும் நாறி, |
||
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே. | உரை | |
மகள்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மோசிகீரன் |
144. பாலை |
கழிய காவி குற்றும், கடல |
||
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே |
||
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர, |
||
இவ் வழிப் படுதலும் ஒல்லாள்-அவ் வழிப் |
||
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ- |
||
செல் மழை தவழும் சென்னி |
||
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே! | உரை | |
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன் |
167. முல்லை |
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல், |
||
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ, |
||
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத் |
||
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர் |
||
'இனிது' எனக் கணவன் உண்டலின், |
||
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. | உரை | |
கடிநகர் சென்ற செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது. - கூடலூர் கிழார் |
242. முல்லை |
கானங்கோழிக் கவர் குரற் சேவல் |
||
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப் |
||
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் |
||
சீறூரோளே, மடந்தை; வேறு ஊர் |
||
வேந்து விடு தொழிலொடு செலினும், |
||
சேந்து வரல் அறியாது, செம்மல் தேரே. | உரை | |
கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.- குழற்றத்தன் |
356. பாலை |
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக் |
||
கழலோன் காப்பப் கடுகுபு போகி, |
||
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த |
||
வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய |
||
யாங்கு வல்லுநள்கொல் தானே-ஏந்திய |
||
செம் பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த |
||
பாலும் பல என உண்ணாள், |
||
கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே? | உரை | |
மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது. - கயமனார.் |
378. பாலை |
ஞாயிறு காணாத மாண் நிழற் படீஇய, |
||
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய், |
||
தண் மழை தலையவாகுக-நம் நீத்துச் |
||
சுடர் வாய் நெடு வேற் காளையொடு |
||
மட மா அரிவை போகிய சுரனே! | உரை | |
மகள் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது. - கயமனார் |
396. நெய்தல் |
பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள், |
||
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே, |
||
எளிது என உணர்ந்தனள்கொல்லோ-முளி சினை |
||
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல் |
||
வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன் |
||
மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும் |
||
கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே? | உரை | |
மகட் போக்கிய தாய் உரைத்தது, - கயமனார். |