முகப்பு |
உகாய் |
274. பாலை |
புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து |
||
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர, |
||
விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு, |
||
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர் |
||
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் |
||
இன்னாக் கானமும், இனிய-பொன்னொடு |
||
மணி மிடை அல்குல் மடந்தை |
||
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே. |
உரை | |
பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - உருத்திரன் |
363. மருதம் |
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு, |
||
செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும் |
||
மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று, |
||
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் |
||
இன்னா அருஞ் சுரம் இறத்தல் |
||
இனிதோ-பெரும!-இன் துணைப் பிரிந்தே? |
உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது. - செல்லூர்க் கொற்றன் |