முகப்பு |
ஓமை |
79. பாலை |
கான யானை தோல் நயந்து உண்ட |
||
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை |
||
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப் |
||
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும் |
||
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச் |
||
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு |
||
ஒல்லேம் என்ற தப்பற்குச் |
||
சொல்லாது ஏகல் வல்லுவோரே. |
உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- குடவாயிற் கீரனக்கன் |
124. பாலை |
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை, |
||
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு |
||
இன்னா என்றிர்ஆயின், |
||
இனியவோ-பெரும!-தமியோர்க்கு மனையே? |
உரை | |
புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
207. பாலை |
'செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்' என்று, |
||
அத்த ஓமை அம் கவட்டு இருந்த |
||
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி |
||
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும் |
||
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி, |
||
நல் அடி பொறிப்பத் தாஅய்ச் |
||
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே. |
உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து. 'அவர் செல்வார்' என்று தோழி சொல்ல, கிழ்த்தி உரைத்தது.- உறையன். |
260. பாலை |
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும் |
||
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே; |
||
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்; |
||
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார் |
||
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை |
||
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து, |
||
கன்று இல் ஓர் ஆ விலங்கிய |
||
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே. |
உரை | |
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார். |
396. நெய்தல் |
பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள், |
||
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே, |
||
எளிது என உணர்ந்தனள்கொல்லோ-முளி சினை |
||
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல் |
||
வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன் |
||
மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும் |
||
கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே? |
உரை | |
மகட் போக்கிய தாய் உரைத்தது, - கயமனார். |