முகப்பு |
கொன்றை |
21. முல்லை |
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு, |
||
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர் |
||
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக் |
||
கானம், 'கார்' எனக் கூறினும், |
||
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே. |
உரை | |
பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, 'அவர் வரல் குறித்த பருவ வரவின் கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு?' என்று தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பு அறிந்த தலைமகள், 'கானம் அவர் வரு |
66. முல்லை |
மடவமன்ற, தடவு நிலைக் கொன்றை- |
||
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய |
||
பருவம் வாராஅளவை, நெரிதரக் |
||
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த, |
||
வம்ப மாரியைக் கார் என மதித்தே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறீஇயது - கோவர்த்தனார் |
148. முல்லை |
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த |
||
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக் |
||
காசின் அன்ன போது ஈன் கொன்றை |
||
குருந்தொடு அலம்வரும் பெருந் தண் காலையும், |
||
'கார் அன்று' என்றிஆயின், |
||
கனவோ மற்று இது? வினவுவல் யானே. |
உரை | |
பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்த, தலைமகள் சொல்லியது. - இளங்கீரந்தையார். |
183. முல்லை |
சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ |
||
நம் போல் பசக்கும் காலை, தம் போல் |
||
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு |
||
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?- |
||
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை |
||
மென் மயில் எருத்தின் தோன்றும் |
||
புன் புல வைப்பிற் கானத்தானே. |
உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒளவையார் |
233. முல்லை |
கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி |
||
கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர் |
||
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன |
||
கார் எதிர் புறவினதுவே-உயர்ந்தோர்க்கு |
||
நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும் |
||
வரைகோள் அறியாச் சொன்றி, |
||
நிரை கோற் குறுந்தொடி தந்தை ஊரே. |
உரை | |
பட்ட பின்றை வரையாது சென்று, வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயன் |