முகப்பு |
வேம்பு |
24. முல்லை |
கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர் |
||
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ? |
||
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து |
||
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக் |
||
குழைய, கொடியோர் நாவே, |
||
காதலர் அகல, கல்லென்றவ்வே. |
உரை | |
பருவங் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது. - பரணர் |
67. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-கிள்ளை |
||
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம் |
||
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப் |
||
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும் |
||
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே? |
உரை | |
பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை |
196. மருதம் |
வேம்பின் பைங் காய் என் தோழி தரினே, |
||
'தேம் பூங் கட்டி' என்றனிர்; இனியே, |
||
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர் |
||
தைஇத் திங்கள் தண்ணிய தரினும், |
||
'வெய்ய உவர்க்கும்' என்றனிர்- |
||
ஐய!-அற்றால் அன்பின் பாலே. |
உரை | |
வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது. - மிளைக் கந்தன். |
281. பாலை |
வெண் மணற் பொதுளிய |
||
பைங் கால் கருக்கின் |
||
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு, |
||
அத்த வேம்பின் அமலை வான் பூச் |
||
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, |
||
குன்று தலைமணந்த கானம் |
||
சென்றனர்கொல்லோ-சேயிழை!-நமரே? |
உரை | |
பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.- குடவாயிற் கீரத்தன் |