முகப்பு |
கள்ளி |
16. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர் |
||
பொன் புனை பகழி செப்பம் கொண்மார், |
||
உகிர் நுதி புரட்டும் ஓசை போல, |
||
செங் காற் பல்லி தன் துணை பயிரும் |
||
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே? |
உரை | |
பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு, தோழி கூறியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
67. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-கிள்ளை |
||
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம் |
||
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப் |
||
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும் |
||
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே? |
உரை | |
பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை |
154. பாலை |
யாங்கு அறிந்தனர்கொல்- தோழி! - பாம்பின் |
||
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து, |
||
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி, |
||
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை |
||
பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத் |
||
தயங்க இருந்து, புலம்பக் கூஉம் |
||
அருஞ் சுர வைப்பின் கானம் |
||
பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே? |
உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து, தலைமகள் தோழிக்கு உரைத்தது.- மதுரைச் சீத்தலைச் சாத்தன் |
174. பாலை |
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக் |
||
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி |
||
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும் |
||
அத்தம் அரிய என்னார், நத்துறந்து, |
||
பொருள்வயிற் பிரிவார்ஆயின், இவ் உலகத்துப் |
||
பொருளே மன்ற பொருளே; |
||
அருளே மன்ற ஆரும் இல்லதுவே. |
உரை | |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெண்பூதி |