முகப்பு |
கொன்றை |
21. முல்லை |
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு, |
||
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர் |
||
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக் |
||
கானம், 'கார்' எனக் கூறினும், |
||
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே. |
உரை | |
பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, 'அவர் வரல் குறித்த பருவ வரவின் கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு?' என்று தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பு அறிந்த தலைமகள், 'கானம் அவர் வரு |
66. முல்லை |
மடவமன்ற, தடவு நிலைக் கொன்றை- |
||
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய |
||
பருவம் வாராஅளவை, நெரிதரக் |
||
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த, |
||
வம்ப மாரியைக் கார் என மதித்தே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறீஇயது - கோவர்த்தனார் |
183. முல்லை |
சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ |
||
நம் போல் பசக்கும் காலை, தம் போல் |
||
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு |
||
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?- |
||
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை |
||
மென் மயில் எருத்தின் தோன்றும் |
||
புன் புல வைப்பிற் கானத்தானே. |
உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒளவையார் |