முகப்பு |
உழுந்து |
68. குறிஞ்சி |
பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின் |
||
ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும் |
||
அரும் பனி அற்சிரம் தீர்க்கும் |
||
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே. |
உரை | |
பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது. - அள்ளூர் நன்முல்லை |
384. மருதம் |
உழுந்துடை கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள், |
||
நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர் |
||
நலன் உண்டு துறத்தி ஆயின், |
||
மிக நன்று அம்ம-மகிழ்ந!-நின் சூளே. |
உரை | |
'நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளூறவு நன்றாயிருந்தது!' என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது. - ஓரம்போகியார் |