முகப்பு |
பூனை (வெருகு) |
107. மருதம் |
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன |
||
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!- |
||
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் |
||
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி, |
||
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர் |
||
யாணர் ஊரனொடு வதிந்த |
||
ஏம இன் துயில் எடுப்பியோயே! |
உரை | |
பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது. - மதுரைக் கண்ணனார். |
139. மருதம் |
மனை உறை கோழி குறுங் கால் பேடை, |
||
வேலி வெருகினம் மாலை உற்றென, |
||
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய |
||
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு |
||
இன்னாது இசைக்கும் அம்பலொடு |
||
வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே. |
உரை | |
வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - ஒக்கூர் மாசாத்தியார். |
220. முல்லை |
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின் |
||
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை |
||
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை, |
||
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக் |
||
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின் |
||
வண்டு சூழ் மாலையும், வாரார்; |
||
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே. |
உரை | |
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது. - ஒக்கூர் மாசாத்தி |
240. முல்லை |
பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக் |
||
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர் |
||
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி, |
||
வாடை வந்ததன் தலையும், நோய் பொர, |
||
கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக் |
||
கடல் ஆழ் கலத்தின் தோன்றி, |
||
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே. |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தல் கொல்லன் அழிசி. |