முகப்பு |
அயிரை |
128. நெய்தல் |
குண கடல் திரையது பறை தபு நாரை |
||
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை |
||
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச் |
||
சேயள் அரியோட் படர்தி; |
||
நோயை-நெஞ்சே!-நோய்ப் பாலோயே. |
உரை | |
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉம் ஆம். - பரணர் |
166. நெய்தல் |
தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை |
||
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும், |
||
ஊரோ நன்றுமன், மரந்தை; |
||
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே. |
உரை | |
காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது. - கூடலூர் கிழார் |
178. மருதம் |
அயிரை பரந்த அம் தண் பழனத்து |
||
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால் |
||
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள் |
||
இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர்; |
||
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு |
||
அரியம் ஆகிய காலைப் |
||
பெரிய நோன்றனிர்; நோகோ யானே. |
உரை | |
கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றினை நினைந்து, அழிந்து கூறியது. - நெதும்பல்லியத்தை |