முகப்பு |
சுறா (கோட்டுமீன்) |
230. நெய்தல் |
அம்ம வாழி, தோழி! கொண்கன்- |
||
தான் அது துணிகுவனல்லன்; யான் என் |
||
பேதைமையால் பெருந்தகை கெழுமி, |
||
நோதகச் செய்தது ஒன்று உடையேன்கொல்லோ?- |
||
வயச் சுறா வழங்கு நீர் அத்தம் |
||
தவச் சில் நாளினன் வரவு அறியானே. |
உரை | |
வலிதாகக் குறிக் குறை நயப்பித்தது. - அறிவுடை நம்பி |
269. நெய்தல் |
சேயாறு சென்று, துனைபரி அசாவாது, |
||
உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல- |
||
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் |
||
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும் |
||
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய |
||
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால், |
||
பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு, |
||
'இனி வரின் எளியள்' என்னும் தூதே. |
உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது - கல்லாடனார் |
304. நெய்தல் |
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி |
||
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ் |
||
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக் |
||
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய, |
||
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து |
||
வெண் தோடு இரியும் வீ ததை கானல், |
||
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு |
||
செய்தனெம்மன்ற, ஓர் பகை தரு நட்பே. |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கணக்காயன் தத்தன் |
318. நெய்தல் |
எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின், |
||
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய், |
||
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன் |
||
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று |
||
அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப் |
||
பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள் |
||
பிழையா வஞ்சினம் செய்த |
||
களவனும், கடவனும், புணைவனும், தானே. |
உரை | |
கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |