ஏ-ஏம்=காப்பு,பாதுகாப்பு, இன்பம். ஏம்-ஏமா. ஏமாத்தல்=அரணாதல் ஏம்+மரு=ஏமரு. ஏமருதல்=காக்கப்படுதல். ஏம்+ஆர்=ஏமார். ஏமார்த்தல்=வலுப்படுத்தல். ஏம்-ஏமை-யாமை=பாதுகாப்பான ஒடுள்ளது. ஒ.நோ: ஏன்-யான்,ஏது-யாது. யாமை-ஆமை,ஒ.நோ.யானை-ஆனை. ஏம்-ஏமம்=பாதுகாப்பு,ஏமம்-யாமம்= பாதுகாப்பான மறைவிற்கேற்ற நள்ளிரவு. ஏமம்-சேமம். ஒ .நோ:
ஏண்-சேண்.சேமம்-க்ஷேம (வ.). கசடு: கசளுதல்=கலத்தல், கலங்குதல், கலவையாதல் மண்டியாதல். கசள்-கசண்டு=அடிமண்டி. கசண்டு-கசடு=மண்டி,கோது, குற்றம். கசடு-கசட்ட (வ.). கணம்: கல்-கல, கல்-கள். கள்ளுதல் கலத்தல். கள்-களம் = கூட்டம், அவை. கள-கண-கணம்=கூட்டம். கணத்தல்-கூடுதல் கணம்-கண (வ.). கந்து: கும்முதல்-திரளுதல், கும்-கம்-கந்து = திரண்டதூண். ஒ. நோ: உம்-உந்து. கந்து-ஸ்கந்த (வ.). கருமம்: கருத்தல்-கை கருக்குமாறு வினை செய்தல். இதற்கு எதிர் செய்தல். செய்தல்-கைசிவக்குமாறுவினைசெய்தல். கடுவுழைப்பால்கருப்பர் கைகருப்பதும் சிவப்பர்கை சிவப்பதும் இயற்கை. கரு-கருமம்-கர்மன் (வ.). கரு-க்ரு(வ.). கருத்தல் என்னும் வினை இன்று வழக்கற்றது. கருமம் என்னும் சொல்லொடு தொடர்புடையதும், கரு என்னும் வினை முதனிலையைக் கொண்டதுமான கருவி என்னும் சொல், தூய தென் சொல்லாயிருத்தலை நோக்குக. கரை: கரைதல=அழைத்தல், சொல்லுதல். விளம்புதல் கரை-க்ரு(வ.g), கவரி-கவரம்=சினம். கவரம்-கவரி=சினம் மிக்க காட்டெருமை, எருமை. ''படிந்து சேடெறியுஞ் செங்கட் கவரியும்'' (கல்லாடம், 53: 30)
|