சாண் ஏறினால் முழம் சருக்குகிறது
குட்டிச்சுவரிலே தேள்கொட்ட, நெடுஞ்சுவரிலே நெறிகட்டினது போல
தாம் சாவ மருந்துண்பவர் இல்லை
பதறாத காரியம் சிதறாது
கொக்கின் தலைமேல் வெண்ணெய் வைத்துப் பிடித்தல்

அவற்றோடொத்த இந்நூல் பழமொழிகள் :

இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்றுவிடும் (190)
நல்லறம் செய்வது செய்யாது கேள் (367)
பூண்ட பறையறையா ராயினார் இல் (84)
பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள் (3)
மச்சேற்றி ஏணி களவு (136)
மயில் போலும் கள்வர் உடைத்து (194)
முயல் விட்டுக் காக்கை தினல் (370)
முழங்குறைப்பச் சாண் நீளுமாறு (100)
முழந்தாள் கிழிந்தான் மூக்குப் பொதிவு (19)
யாருளரோ தங்கன்று சாக்கறப்பார் (131)
விரையிற் கருமம் சிதையும் (164)
வெண்ணெய் மேல்வைத்து மயில் கொள்ளுமாறு (210)

இனி, இந்நூலின் சிறந்த கருத்துக்கள் பல மற்றைய நீதி நூல்களிலும் தனிப்பெருஞ் சிறப்புடன், உலகியலைப் பெரிதும் ஒட்டிச்செல்வது பெரிதும் உணர்ந்து கொள்ளத்தக்கது. உடன்பிறந்தாராயினும் இருவர் நெடுநாள் உடனுறைந்திருத்தல் இன்னாமையே பயக்கும் எனக் கூறுகிறது ஒரு வெண்பா. இஃது உலகியலை ஒட்டிய சிறந்ததொரு கருத்தன்றோ? அவ் வெண்பாவைக் கீழே காண்க.

கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள்
ஒருவழி நீடும் உறைதலோ துன்பம்
பொருகடல் தண்சேர்ப்ப! பூந்தா மரைமேல்
திருவொடும் இன்னாது துச்சு.

திருவொடும் இன்னாது துச்சு" என்பது ஈண்டு வந்துள்ள பழமொழி. திருமகளேயாயினும் நெடுநாள்