16 ஆதிரை பிச்சை இட்ட காதை |
||
[ மணிமேகலைக்கு ஆதிரை என்னும் |
||
பத்தினிப்பெண்டிர் பாத்தூண் ஈத்த பாட்டு ] |
||
ஈங்குஇவள் செய்தி கேள்என விஞ்சையர் |
||
பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போன்: |
உரை | |
ஆதிரை கணவன் ஆயிழை கேளாய் |
||
சாதுவன் என்போன் தகவுஇலன் ஆகி |
||
5 |
அணியிழை தன்னை அகன்றனன் போகிக் |
|
கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க |
||
வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக் |
||
கெட்ட பொருளின் கிளைகேடு உறுதலின் |
||
பேணிய கணிகையும் பிறர்நலம் காட்டிக் |
||
10 |
காணம் இலிஎனக் கைஉதிர்க் கோடலும், |
உரை |
வங்கம் போகும் வாணிகர் தம்முடன் |
||
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி, |
||
நளிஇரு முந்நீர் வளிகலன் வௌவ |
||
ஒடிமரம் பற்றி ஊர்திரை உதைப்ப |
||
15 |
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் |
|
பக்கம் சார்ந்ததுஅவர் பான்மையன் ஆயினன். |
உரை | |
நாவாய் கேடுஉற நன்மரம் பற்றிப் |
||
போயினன் தன்னோடு உயிர்உயப் போந்தோர் |
||
இடைஇருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல் |
||
20 |
உடைகலப் பட்டாங்கு ஒழிந்தோர் தம்முடன் |
|
சாதுவன் தானும் சாவுற் றான்என, |
உரை | |
ஆதிரை நல்லாள் ஆங்குஅது தான்கேட்டு |
||
ஊரீ ரேயோ ஒள்அழல் ஈமம் |
||
தாரீ ரோஎனச் சாற்றினள் கழறிச் |
||
25 |
சுடலைக் கானில் தொடுகுழிப் படுத்து |
|
முடலை விறகின் முளிஎரி பொத்தி |
||
மிக்கஎன் கணவன் வினைப்பயன் உய்ப்பப் |
||
புக்குழிப் புகுவேன் என்றுஅவள் புகுதலும், |
உரை | |
படுத்துடன் வைத்த பாயல் பள்ளியும் |
||
30 |
உடுத்த கூறையும் ஒள்எரி உறாஅது |
|
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் |
||
சூடிய மாலையும் தொல்நிறம் வழாது |
||
விரைமலர்த் தாமரை ஒருதனி இருந்த |
||
திருவின் செய்யோள் போன்றுஇனிது இருப்பத், |
உரை | |
35 |
தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் |
|
யாது செய்கேன் என்றுஅவள் ஏங்கலும், |
||
ஆதிரை கேள்உன் அரும்பெறல் கணவனை |
||
ஊர்திரை கொண்டாங்கு உய்ப்பப் போகி |
||
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் |
||
40 |
பக்கம் சேர்ந்தனன் பல்லியாண்டு இராஅன் |
|
சந்திர தத்தன் எனும்ஓர் வாணிகன் |
||
வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும் |
||
நின்பெருந் துன்பம் ஒழிவாய் நீயென |
||
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும், |
உரை | |
45 |
ஐஅரி உண்கண் அழுதுயர் நீங்கிப் |
|
பொய்கைபுக்கு ஆடிப் போதுவாள் போன்று |
||
மனங்கவல்வு இன்றி மனையகம் புகுந்துஎன் |
||
கண்மணி அனையான் கடிதுஈங்கு உறுகெனப் |
||
புண்ணிய முட்டாள் பொழிமழை தரூஉம் |
||
50 |
அரும்பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும் |
|
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள். |
உரை | |
|
ஆங்குஅவள் கணவனும் அலைநீர் அடைகரை | |
ஓங்குஉயர் பிறங்கல் ஒருமர நீழல் |
||
மஞ்சுஉடை மால்கடல் உழந்தநோய் கூர்ந்து |
||
55 |
துஞ்சுதுயில் கொள்ள, அச் சூர்மலை வாழும் |
|
நக்க சாரணர் நயம்இலர் தோன்றிப் |
||
பக்கம் சேர்ந்து பரிபுலம் பினன்இவன் |
||
தானே தமியன் வந்தனன் அளியன் |
||
ஊன்உடை இவ்வுடம்பு உணவுஎன்று எழுப்பலும், |
உரை | |
60 |
மற்றவர் பாடை மயக்குஅறு மரபின் |
|
கற்றனன் ஆதலின் கடுந்தொழில் மாக்கள் |
||
சுற்று நீங்கித் தொழுதுஉரை யாடி |
||
ஆங்குஅவர் உரைப்போர் அருந்திறல் கேளாய் |
||
ஈங்குஎம் குருமகன் இருந்தோன் அவன்பால் |
||
65 |
போந்துஅருள் நீஎன அவருடன் போகி, |
|
கள்அடு குழிசியும் கழிமுடை நாற்றமும் |
||
வெள்என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் |
||
எண்குதன் பிணவோடு இருந்தது போலப் |
||
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கிப் |
||
70 |
பாடையில் பிணித்துஅவன் பான்மையன் ஆகிக் |
|
கோடுஉயர் மரநிழல் குளிர்ந்த பின்அவன் |
உரை | |
ஈங்குநீ வந்த காரணம் என்என |
||
ஆங்குஅவற்கு அலைகடல் உற்றதை உரைத்தலும், |
||
அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன் |
||
75 |
வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள் |
|
நம்பிக்கு இளையள்ஓர் நங்கையைக் கொடுத்து |
||
வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும்என, |
||
அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து |
||
வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும், |
உரை | |
80 |
பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு |
|
உண்டோ ஞாலத்து உறுபயன் உண்டு எனில் |
||
காண்குவம் யாங்களும் காட்டுவா யாக எனத் |
||
தூண்டிய சினத்தினன் சொல்எனச் சொல்லும்: |
உரை | |
மயக்கும் கள்ளும் மன்உயிர் கோறலும் |
||
85 |
கயக்குஅறு மாக்கள் கடிந்தனர் கேளாய்: |
|
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் |
||
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் |
||
நல்அறம் செய்வோர் நல்உலகு அடைதலும் |
||
அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும் |
||
90 |
உண்டுஎன உணர்தலின் உரவோர் களைந்தனர் |
|
கண்டனை யாகென, கடுநகை எய்தி |
உரை | |
உடம்புவிட்டு ஓடும் உயிர்உருக் கொண்டுஓர் |
||
இடம்புகும் என்றே எமக்குஈங்கு உரைத்தாய் |
||
அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் அவ்வகை |
||
95 |
செவ்வனம் உரைஎன, சினவாது இதுகேள் |
உரை |
உற்றதை உணரும் உடல்உயிர் வாழ்வுழி |
||
மற்றைய உடம்பே மன்உயிர் நீங்கிடில் |
||
தடிந்துஎரி ஊட்டினும் தான்உண ராதுஎனின் |
||
உடம்பிடைப் போனதுஒன்று உண்டுஎன உணர்நீ |
||
100 |
போனார் தமக்குஓர் புக்கில்உண்டு என்பது |
|
யானோ வல்லேன் யாவரும் உணர்குவர் |
||
உடம்புஈண்டு ஒழிய உயிர்பல காவதம் |
||
கடந்துசேண் சேறல் கனவினும் காண்குவை |
||
ஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை |
||
105 |
பூண்ட யாக்கையின் புகுவது தெளிநீ |
|
என்றுஅவன் உரைத்தலும் எரிவிழி நாகனும் |
உரை | |
நன்றுஅறி செட்டி நல்அடி வீழ்ந்து |
||
கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு |
||
உள்உறை வாழ்உயிர் ஓம்புதல் ஆற்றேன் |
||
110 |
தமக்குஒழி மரபின் சாவுறு காறும் |
|
எமக்குஆம் நல்அறம் எடுத்துஉரை என்றலும், |
உரை | |
நன்று சொன்னாய் நல்நெறிப் படர்குவை |
||
உன்தனக்கு ஒல்லும் நெறிஅறம் உரைக்கேன் |
||
உடைகல மாக்கள் உயிர்உய்ந்து ஈங்குஉறின் |
||
115 |
அடுதொழில் ஒழிந்துஅவர் ஆர்உயிர் ஓம்பி, |
|
மூத்துவிளி மாஒழித்து எவ்வுயிர் மாட்டும் |
||
தீத்திறம் ஒழிகென, சிறுமகன் உரைப்போன் |
||
ஈங்குஎமக்கு ஆகும் இவ்வறம் செய்கேம் |
உரை | |
ஆங்குஉனக்கு ஆகும் அரும்பொருள் கொள்கெனப் |
||
120 |
பண்டும் பண்டும் கலம்கவிழ் மாக்களை |
|
உண்டேம் அவர்தம் உறுபொருள் ஈங்குஇவை |
||
விரைமரம் மென்துகில் விழுநிதிக் குப்பையோடு |
||
இவைஇவை கொள்கென எடுத்தனன் கொணர்ந்து |
||
சந்திர தத்தன் என்னும் வாணிகன் |
||
125 |
வங்கம் சேர்ந்ததில் வந்துஉடன் ஏறி |
|
இந்நகர் புகுந்துஈங்கு இவளொடு வாழ்ந்து |
||
தன்மனை நன்பல தானமும் செய்தனன், |
உரை | |
ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால் |
||
பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென, |
||
130 |
மனையகம் புகுந்து மணிமே கலைதான் |
|
புனையா ஓவியம் போல நிற்றலும் |
||
தொழுது வலம்கொண்டு துயர்அறு கிளவியோடு |
||
அமுத சுரபியின் அகன்சுரை நிறைதரப் |
||
பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென |
||
135 |
ஆதிரை இட்டனள் ஆர்உயிர் மருந்துஎன். |
உரை |
ஆதிரை பிச்சை இட்ட காதை முற்றிற்று. |
||
மேல் |