இனிப் பண்டைக் காலத்து நூல்களுள்ளும் மிக
விரிந்த பெருநூலாகிய இப்பெருங்கதை அப்பண்டைக் காலத்தைப் பற்றி ஆராயும்
வரலாற்றுநூற் புலவர்கட்கும் ஒப்பற்றதொரு சாதனமாகும் என்பது சொல்லாமலே
அமையும்.
பெருங்கதையின் இரண்டாவது காண்டமாகிய இலாவாண
காண்டம் தமிழ் வித்துவான் வகுப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றமையால் முதற்கண் இலாவாண காண்டத்திற்குப் பொழிப்பும் விளக்கமுமாக உரை வரையலாயிற்று. அவ்விலாவாண காண்டம் 1956 ஆம் ஆண்டு கழகத்தாரால்
வெளியிடப்பட்டது. பின்னர் அம் முறையே பற்றி எஞ்சிய உஞ்சைக் காண்டம் முதலிய
காண்டங்கட்கும் தொடர்ந்து உரை வகுத்தேன். கழகத்தார் இப்பொழுது உஞ்சைக்
காண்டத்தை வெளியிடுகின்றனர். ஏனைய காண்டங்களும் அச்சிடப்பெறுகின்றன.
எளியேனை இவ்வுரைப் பணியில் ஈடுபடுத்திவரும் எம் அம்பல வாணர் திருவடிகளை
வழுத்துகின்றேன்.
மேலப்பெருமழை,
இங்ஙனம்
19-9-1962. பொ. வே. சோமசுந்தரன்
|