xiii
சிறப்புப்பாயிரம்
9. | பாவருந்தமிழாற்பேர்பெறுபனுவற்பாவலர்பாதிநாளிரவின் மூவருநெருக்கிமொழிவிளக்கேற்றிமுகுந்தனைத்தொழுதநன்னாடு தேவருமறையுமின்னமுங்காணாச்செஞ்சடைக்கடவுளைப்பாடி யாவருமதித்தோர்மூவரிலிருவர்பிறந்தநாடிந்தநன்னாடு. |
வேறு.
10. |
அந்தத்திருநாட்டந்தநதி
யமுதம்பெருகியிருகரையுஞ்
சந்தத்துடன்காரகில்கமழத்தடங்காவகஞ்சூழ்தடநிறைப்பக் கந்தக்குவளைமேய்பகட்டின்காலானெரிந்துகதிர்முத்தஞ் சிந்தச்சிந்தக்கொழுமுனைக்குமுன்னேருழுவசெய்ச்சங்கம். | 11. |
கொழுநீர்மதுவுண்கடைசியர்தங்குழைதோய்விழியினெழு
நிழலைக்,
கழுநீர்மலரென்றொருபகலுங்காலான்மயக்கிக்களைதுவைப்
பார்,
முழுநீரூடுதமதுநிழன்முழுதுங்கண்டுதொழுதிறைஞ்சிச், செழுநீரரமங்கையரென்றுதிகைப்பார்நகைப்பார்செறு
வெல்லாம்.
| லுக்குப் பெண்ணைநதி நெய்பால்
பெருகிய சரிதை, அருச்சுனன் றீர்த்தயாத்திரைச் சருக்கத்து 16-ஆம் பாடலினுரையிற் கூறப்படும். ஒளவைபாடலுக்குப் பெருகியதனால்,அருந்தமிழறிவினாற் சிறந்து என்றது. முதலிய சனம் - முதலியவற்றின்திரள்;முதலியவற்றைச் சனங்கள் என்று கூறுதலும் ஒன்று. 9. இது அந்தத் திருமுனைப்பாடி நாட்டிற்குள்ள வேறுவகைச் சிறப்பைக் கூறுவது. பாவலரென்றது - பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் என்ற மூவரை: இவர்கள் முதலாழ்வார்களென்றுங் கூறப்படுவர். இவர்கள் சரித்திரமும் தீர்த்தயாத்திரைச்சருக்கத்து 16-ஆஞ் செய்யுளிலுள்ளது. நான்காமடியிற்குறிக்கப்பட்ட மூவர்-தேவாரம்பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள்.திருநாவுக்கரசரும் சுந்தரமூர்த்திகளும் இந்தநாட்டில் முறையே திருவதிகைதிருவெண்ணெய் நல்லூர் என்ற ஊரில் தோன்றியவராவர். காணாச்செஞ்சுடர்க்கடவுளை என்றும் பாடம். 10. யாற்றுநீர்பாய்வதனாலானநீர்வளவருணனை. அமுதம் - நீர். சந்தம் - சந்தனம். தடங்காவகம் சூழ் தடம் - பெரியசோலையினுள்ளிடத்திற் சூழ்ந்திருக்கும்தடாகம். பகடு - எருமைக்கடா. செய்ச்சங்கம் - கழனியிலுள்ள சங்குப்பூச்சிகள்.முத்தஞ்சிந்த ஏருழுவது போல உழுவனஎன்க. முன்னேயுழவுசெயுஞ்சங்கம் என்றும்பாடம். 11. இதுவும் அது : ஒருபகலும் - களைபறிக்கும் ஒவ்வொரு பகலிலும். களைதுவைப்பார் - களைபறிப்பவராகியமகளிர். மயக்கித் திகைப்பாராய் நகைப்பாரென்க.செறு - வயல்.
|