xiv
சிறப்புப்பாயிரம்
12. | கரும்புங்கமுகுந்தலைதெரியாக்கழனிச்செந்நெற்களையாகி யரும்புங்குவளைநறுமலர்த்தேனாறாயெங்குஞ்சேறாக விரும்புஞ்சுருதியிசைகேட்டுவேலைக்கழிக்கானலங்கைதை சுரும்புந்தும்பிகளுமருந்தமாறாதென்றுஞ்சோறிடுமால். |
வேறு. 13. | கம்பலைக்கழனிச்சேனைக்காவலர்கரங்கணீக்கிப் பைம்புலத்துழுநர்தங்கள்பலவகைவிளைவுமீட்டி ஐம்புலத்தவர்க்குமீந்தாங்கறத்தினைவளர்த்தலாலே செம்புலக்கிழத்திக்காவியன்னதச்செல்வநாடே. |
வேறு. 14. | எண்ணுமாகடலேழுமன்றிருகடலாகப் பெண்ணைமாநதிநறுநெய்பால்பெருகுமப்பழனப் பண்ணைநீள்வளம்பல்குசீர்ப்பழையநன்னாட்டில் வண்ணநான்கினுமுயர்ந்துளோனொருமுனிவந்தான். | 15. | ஐந்துபாவுடைநால்வகைக்கவிக்கதிபதியாய் வந்துவட்டமாமணியினன்மணிமுடிபுனைந்து பைந்துழாய்முடிப்பரமனைப்பலகவித்துறையுஞ் சிந்தையான்மொழிந்தன்பர்தந்திருவுளம்பெற்றோன். |
12.
நீர்வளத்தாலான நிலவளம்: தலைதெரியா - வேற்றுமை தெரியாத.
கானல் - கடற்கரை.கைதை - தாழை: இதனிடத்து ஒரு பிரபுவின்தன்மை தொனிக்கும். சுருதியிசை -சுருதியோடுகூடிய இசை. சோறு - உணவு என்ற பொருளும்தோன்றும்: தாழையினுட்பகுதி சோறு எனப்படும்; மகரந்த மென்றாரு முளர்.
13.
நாட்டுச்சிறப்பு: சேனைக்காவலர்கரங்கள் - சேனையையுடைய
மன்னவர்க்கு உரியவரிப்பொருள்கள். ஐம்புலத்தவர் - தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்,தான் என்பவர். புலக்கிழத்தி - நிலமகள்.
14.அந்நாட்டில் வில்லிபுத்தூரார் தோன்றியமை: வண்ணம் நான்கு - பிராமணர்க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்பன. கடலேழு உவரி - கருப்பஞ்சாறு தேன்நெய் தயிர் பால் நன்னீர் இவற்றின் மயமானவை.
15.மூன்று கவிகள் வில்லிபுத்தூராரின் சிறப்பு: ஐந்துபா - வெண்பா ஆசிரியப்பாகலிப்பா வஞ்சிப்பா மருட்பா என்பன. நால் வகைக்கவி ஆசு மதுரம் சித்திரம்வித்தாரம் என்பன. கவிக்கதிபதியாதற்கேற்ற முடிபுனைந்துள்ளானென்க.அன்பர்தந் திருவுளம் பெற்றோன் என்றது, திருமாலடியார்களால் இவன் சிறந்தஅடியவனென்று மதிக்கப்பெற்றவ னென்றபடி.
|