முகப்பு
 
தொடக்கம்


xv

சிறப்புப்பாயிரம்

16.தென்னவர்சேரலர்செம்பியரெனப்பெயர்சிறந்த
மன்னர்மூவரும்வழங்கியவரிசையாலுயர்ந்தோன்
முன்னரெண்ணியமுத்தமிழ்ப்பாவலரெவரும்
பின்னர்வந்தொருவடிவுகொண்டனரெனப்பிறந்தோன்.

17.தாரகாயனவண்டலைதண்டலைச்சனியூர்
வீரராகவனருள்பெறுவில்லிபுத்தூரன்
ஊரராமுடிமண்மிசையுயர்புகழ்நிறுத்தித்
தீரகாகளம்பெறுதலின்யாரினுஞ்சிறந்தோன்.

வேறு.

18. எங்குமிவனிசைபரப்பிவருநாளில்யாமுரைத்தவிந்தநாட்டிற்,
கொங்கர்குலவரபதியாட்கொண்டானென்றொருவண்மைக்
                                 குரிசிறோன்றி,
வெங்கலியின்மூழ்காமற்கருநடப்பேர்வெள்ளத்துவிழா
                                  மனான்காஞ்,
சங்கமெனமுச்சங்கத்தண்டமிழ்நூல்கலங்காமற்றலை
                                  கண்டானே.
   
19. மற்றவனிப்புவியாளும்வளவனுக்குமுடிகவித்துவழுதித்
                                  தெவ்வைச்,
செற்றவனுக்கவனியெல்லாஞ்செங்கோன்மைநிலையிட்டுச்
                                  கமலமாதுங்,
செல்வமெல்லாம், கற்றவருக்கிருகையுடைக்கற்பகம்
                            போலினிதளித்துக்
கொற்றவையுமனங்களிப்பதன்னாமமேருவினுங்கோட்
                                  டினானே.
              

16,தென்னர் - பாண்டியர், கேரளரென்றும் பாடம்.செம்பியர் - சோழர்.
வரிசை -சிறப்பு. முன்னர் - முற்காலத்து.

    17. தார காயன வண்டு - தாரமென்ற இசையைப் பாடவல்ல வண்டு.
காயணவண்டுஎன்று படிப்பாருமுண்டு. தாரகாகண வண்டு என்றும் பாடம். அலை
- சஞ்சரிக்கின்ற,தண்டலை - சோலை. தீரகாகளம் - மனத்திண்மையைக் காட்டும்
வெற்றிச்சின்னம்.தகப்பனார் பெயர் வீரராகவனென்பது இதிற் பெறப்படும்.

18. நான்குகவிகள் வில்லிபுத்தூராரைக் கொண்டு பாரதம் பாடுவித்த
வரபதியாட்கொண்டான் சிறப்புக் கூறும்: நடுநாடு, மாகதக்கொங்கு எனப்படும்:
அதனையாண்டவர் கொங்கர்: அக் கொங்கர்குலத்துத் தோன்றியவன்
வரபதியாட்கொண்டானென்ற அரசன.. கலி - வறுமை. அடுத்துள்ள
கருநாடநாட்டினுள்வழங்கும் கன்னடபாஷையில் மனம்பதியாமல்
செந்தமிழ்ப்பாஷையிலேயே அன்னான்மனம் பதிந்ததனால், 'கருநடப்பேர்
வெள்ளத்து விழாமல்' என்றது.முதலிடைகடைச்சங்கமென்று மதுரையில் வழங்கிய
சங்கங்களில் அரங்கேறியதமிழ்நூல்களை நிலைகலங்காமற் பாதுகாத்துத்
தன்னாட்டில் நான்காஞ்சங்கமென்னுமாறுபுலவர் கூட்டத்தைத் திரட்டியிருந்தனன்
அந்தமன்னவ னென்க.

19. வழுதித்தெவ்- பாண்டியனாகிய பகைவன். கொற்றவை - வீரலட்சுமி.
கோட்டினான்-எழுதினான். இச்செய்யுளின் குறிப்பினால், சோழவரசர்க்குக்
கீழ்ப்படிந்துஅவனதுபகைவரையோட்டிய சிற்றரசன் இந்த வரபதியாட்கொண்டா
னென்பதுபெறப்படும். பகைவென்றதனால் கொற்றவையும், புலவர்க்கு வழங்குமாறு
அப்

முன் பக்கம்