அமிர்தமதி, மகனை நோக்கி, நீ
மன்னனைப் பிரிந்ததுயான்செய்த தீவினை; இனி, இதற்கு வருந்தாது, முடிபுனைந்து
ஆள்க வென்றாளென்க
என்வினை என்று கூறுவது உலகவழக்கு. ‘இனையைநீயாயதெல்லாம் எம்மனோர் செய்த பாவம்‘ (சீவக. 391,315) என்றது அறிக. விடுத்திடு - ஒருசொல்.
யசோமதியின் துன்பம் பெரிதாதலின். ‘வெந்நோய்‘ என்றார்.‘பொதுக்கடிந்து ஆளுதல்‘ பூமி பிற அரசர்களுக்கு உரிமையின்றி ஏகசக்ராதிபனாய் ஆளுதல்.
(80)
யசோமதி முடிபுனைந்து
அரசனாதல்
153. |
வாரணி முரச மார்ப்ப மணிபுனை மகுடஞ் சூடி |
|
யேரணி யார மார்ப னிசோமதி யிறைமை யெய்திச் |
|
சீரணி யடிகள் செல்வத் திருவற மருவல்1
செல்லான் |
|
ஓரணி யார மார்ப ருவகை2
யங் கடலு ளாழ்ந்தான். |
(இ-ள்.) ஏர் அணி ஆரம்மார்பன் - அழகிய ஆரமணிந்த மார்பினனான, இசோமதி - யசோமதி, வார் அணிமுரசம் ஆர்ப்ப
- வார்க்கட்டமைந்த மங்கள முரசு முழங்க, மணிபுனை மகுடஞ் சூடி - மணிபுனைந் தியற்றிய முடியைச் சூடி,
இறைமை எய்தி - ராஜபதவியை அடைந்து, சீர்அணி அடிகள் - (தேவர்கள் இயற்றிய) சிறப்படைந்த ஆதி பகவன் அருளிய, செல்வத் திரு அறம் - முக்திச்
செல்வத்தைத் தரும் திருவறத்தினை, மருவல் செல்லான் - சேராதவனாகி, ஓர் அணி ஆரமார்பர் - ஒப்பற்ற அழகிய ஆரமணிந்தமார்பினாரான
மாதர்களின், உவகை அம் கடலுள் ஆழ்ந்தான் - காமக்கடலினுள் மூழ்கி இன்புற்றான். (எ-று.)
யசோமதி அரசனாகி, திருவறத்தை மேற்கொள்ளாமல் மகளிர் இன்பத்தை அனுபவித்தானென்க.
இறைமை-அரசனாந் தலைமை. திருவறம் - ஜிநதருமம்.
|