மூன்றாஞ்
சருக்கம்
---::
::---
யசோதரனும்
சந்திரமதியும் மயிலும் நாயுமாய்ப் பிறந்தசெய்த கூறல்
155. |
மற்றம் மன்னன் மதிமதி யென்றிவர் |
|
நற்ற வத்திறை நல்லறம் புல்லலாப் |
|
பற்றி னோடு முடிந்தனர் பல்பிறப் |
|
புற்ற தாகு முரைக்குறு கின்றதே. |
(இ-ள்.) அ மன்னன் - அந்த
யசோதரன், மதிமதி - சந்திரமதி, என்ற இவர் - என்ற இருவரும், நல்தவத்து இறை- நல்ல
தவமுடைய முதல்வனாகிய ஆதிபகவன் அருளிய, நல்லறம் - திருவறத்தினை, புல்லலா-சேராத,
பற்றினோடு முடிந்தனர் - பற்றினால் ஈட்டிய வினைகளோடு இறந்தனர்; (அதனால் அவாகட்கு),
பல் பிறப்பு உற்றது ஆகும் - பல பிறவி நேர்ந்ததாகும், உரைக்க உரைகின்றது - நாம்
உரைப்பதற்கு அமைந்திருக்கின்றது (அதுவே) (எ-று.)
மன்னனும் தாயும் உற்ற பிறவிகளை இனிக் கூறுவாம் என்றா ரென்க.
மற்று, ஏ, அசைகள். நல்லறம் - தருமோபதேசம். ‘அவாவென்ப வெல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும்,
தவாஅப்பிறப்பீனும் வித்து‘ ஆகலின், பற்றினோடு இறந்ததனால், ‘பல்பிறப்பு உற்றது‘
என்றார். உரைக்க என்பதில் அகரம் தொக்கது.
(1)
156. |
விந்த நாம் விலங்கலின் மன்னவன் |
|
வந்தொர் மாமயி லின்வயிற் றண்டமாய் |
|
வந்து நாளிடை நாயொடு கண்டகன் |
|
வந்தொர் வாளியி னான்மயில்
வாட்டினான். |
(இ-ள்.) மன்னவன் - யசோதரன், விந்த நாம விலங்கலில்-விந்த்யகிரி
என்னும் பெயருடைய மலியிடத்தே, ஓர் மாமயிலின் வயிற்றுவந்து - ஓர் அழகிய மயிலின்
கருவில் வந்து, அண்டமாய் நந்தும் நாள் இடை - முட்டையாய்க்.
|