கருமுற்றி வளரும் நாளில், கண்டகன் - வேடன் ஒருவன், நாயொடுவந்து
- வேட்டை நாயுடன் வந்து, ஓர் வாளியினால் ஓர் அம்பினால், மயில் வாட்டினன் - அம்மயிலைக்
கொன்றான்.
மன்னனை முட்டையாகக் கருவில் கொண்டுள்ள மயி்லை ஒரு வேடன் கொன்றா னென்க.
நாமம் - பெயர். விலங்கல் - மலை நந்துதல் - வளர்தல்.
கண்டகன் - முட்போன்றவன்; கொடியோன் மயில், முட்டையிடுவதற்குமுன் அதனை வேடன்
கொன்றானென்க.
157. |
அம்பின் வாய்விழு மண்ட மெடுத்தவன் |
|
வம்பு வாரண முட்டையின் வைத்துடன் |
|
கொம்ப னாயிது கொண்டு வளர்க்கென |
|
நம்பு காமர் புளிஞிகை நல்கினான். |
(இ-ள்.)
அவன் - அவ்வேடன், அம்பின் வாய் விழும் - அம்புபட்டுப் பிளவுற்ற வழியாக வெளிவந்த,
அண்டம் - மயிலின் முட்டையை, எடுத்து - எடுத்துக் கொண்டு போய், கொம்பு அனாய் -
பூங்கொம்பு போல்பவளே, இது கொண்டு - இம்முட்டையைக் கொண்டு, வம்பு வாரணமுட்டையின்
உடன்வைத்து - புதிய கோழிமுட்டையுடன் வைத்துப் பொரிக்கச்செய்து -வளர்க்க என -
வளர்ப்பாயாக என்று சொல்லி, நம்பு - (தான்) விரும்புகின்ற, காமர் அழகிய, புளிஞி
- வேட்டுவச்சியின், கை - கையிலே, நல்கினான் - கொடுத்தான் (எ-று.)
வேடன், அம்பின்வழி
வெளி வந்த மயிலின் முட்டையைக் கொண்டுபோய் மனைவியிடம் கொடுத்தா னென்க.
வம்பு - புதுமை. வாரணம் - ஈண்டுக் கோழி. நம்பு-விருப்பம்;
‘நம்பும் மேவும் நசையாகும்மே, ‘புளிஞன் என்பது புளிந்த; என்னும் வடசொல்லின் திரிபு.
புளிஞி, பெண்பாற் சொல். அடைகாத்தற்குத் தாய்மயில் இன்மையின் கோழிமுட்டையுடன்
வைத்து வளர்க்கச் சொல்லினான் (3)
158. |
சந்தி ரம்மதி யாகிய தாயவள் |
|
வந்து
மாநக ரப்புறச் சேரிவாய |
|