160. |
மன்ன னாகிய மாமயின்1
மாளிகை |
|
தன்னின் முன்னெழு வார்க்குமுன்2
தானெழாத் |
|
தன்னை யஞ்சினர் தங்களைத் தான் வெருண்3 |
|
டின்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே . |
(இ-ள்.)
மன்னனாகிய மாமயில் - யசோதர மன்னானயிருந்த அழகிய மயிலானது, மாளிகை - மாளிகையில்,
தன்னின்முன் எழுவாருக்கு - (முன்பு) தனக்குமுன் எழுந்திருக்கும் ஏவலர்க்கு, முன் - முன்னதாக,
தான் எழா-(இப்பொழுது) தான் எழுந்திருந்தும், தன்னை அஞ்சினர் தங்களை - முன் தன்னைக்
கண்டு அஞ்சிய ஏவலரைக் கண்டு தான் வெருண்டு - (இப்பொழுது) தான் அஞ்சியும், இன்ன
ஆற்றின் வளர்ந்திடுகின்றது - இம்முறையில் வளர்ந்துவருகின்றது. (எ-று.)
மயில், அஞ்சி வளர்ந்திடுகின்ற தென்க.
யசோதரன், தன் அரண்மனையிலேயே மயிலாய் வளர்தலின்,
‘தன்னின்... தான் வெருண்டு‘ என்றார். “அச்சக் கிளவிக் கைந்து மிரண்டும், எச்சமில”
என்றதனால் ஈண்டு இரண்டாம் வேற்றுமை அச்சப்பொருளில் வந்தது. எழா - எழுந்து; செய்யா
வென்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்.
(6)
161. |
அஞ்சி லோதியர் தாமடி தைவரப் |
|
பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல் |
|
துஞ்சு மன்னவன் மாமயிற் றோகையோ |
|
டஞ்சி மெல்ல வசைந்தது பூமிமேல். |
(இ-ள்.)
அம் சில் ஓதியர் - அழகிய சிலவாகிய ஓதியையுடைய மகளிர், அடி தைவர - பாதங்களை
வருட, பஞ்சி மெல் அணை பாவிய - பஞ்சினாலமைத்த மெல்லிய அணையை விரித்த, பள்ளிமேல்
- படுக்கையின் மேல், துஞ்சம் மன்னவன் - கண் உறங்கிய வேந்தனாகிய, மாமயில் -
சிறந்த மயில், பூமிமேல் - (இப்பொழுது) தரையிலேயே, அஞ்சி-
1 மாமயில்.
2 வாருக்கு.
3 வெகுண்டு. |
|