- 203 -

பிறருக்கு அஞ்சி, தோகையோடு மெல்ல அசைந்தது - தன்தோகையை ஒடுக்கிக்கொண்டு மெல்ல உறங்குவதாயிற்று. (எ-று.)

மிருதவாகிய அணையில் உறங்கிய மன்னவன்,  மயிலாகித் தரையில் துயின்றனனென்க.

அஞ் சில் ஓதி; சில் ஈண்டுச் சிறுமை; மங்கல வழக்கு. ஓதி, முன்மயில்; இது வடமொழியில் அளகம் என்று வழங்கும்.  ‘ஓதியும் நுதலும் நீவி‘ என்பது காண்க. பஞ்சி - பஞ்சு ; ‘பஞ்சியடிப் பவளத் துவர்வாயவள்‘ என்பது காண்க.  ‘சிறு பூளை செம்பஞ்சு வெண் பஞ்சு சேண, முறுதூவி சேக்கையோ ரைந்து‘ (சீவக 838 உரை) இவ்வைந்தையும் அணையில் அமைத்திருப்பர்.  ஆதலின் பஞ்சி மெல்லணை என்றார் எனினுமாம்.  பாரவுதல் - பரப்புதல்.                (7)

162. சுரைய பாலடி சிற்சுவை பொற்கலத்
  தரைய மேகலை யாரி மைர்ந்துணும
  அரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய
  இரைய வாவி யிருந்தயில் கின்றதே.

 (இ-ள்.) சரைய பால் சுவை அடிசில் - பசுவின் மடியிற் கறந்த பாலில் ஆக்கிய சுவையுள்ள சோற்றினை, பொன் கலத்து - பொற்கிண்ணத்தில் இட்டு, அரைய மேகலையாரின் இடையில் மேகலை யணிந்த உரிமைமகளிர் வேண்டலால், அமர்ந்து உணும்-விரும்பி உண்ணும், அரையன் -யசோதரன், மாமயிலாய் - --, புறப் பள்ளிவாய் - அரண்மனையின் புறமுள்ள அறையில் தங்கி, இரை அவாவி இருந்து - (தனக்கு இடப்படும்) இரையை எதிர்நோக்கியிருந்து, அயில்கின்றது - உண்கின்றது.    (எ-று.)

இன்சுவைப் பாலன்னத்தைப் பொற்கலத்தி விட்டு மகளிர் வேண்ட உண்ட மன்னன் மயிலாகி, காலந் தவறிக் கிடைக்கும் உணவை உண்டு வருந்தினா னென்க.

சுரை - பசுவின் மடி.  மேலையாரின் அமர்ந்து - மகளிர் வேண்டி யூட்டுதலால் அவர்களுக்காக விரும்பி என்க. ‘அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட‘  (நாலடி).