என்பதனோடு ஒப்பிடுக. அரையன், அரசன்; இடைப் போலி.
இரை. தானாகக் கிடைத்த இரை யெனினுமாம். அவாவுதல், இச்சித்தல். (8)
163. |
வந்து குப்பையின் மாசன முண்டபின் |
|
சிந்து மெச்சில்கள் சென்று கவர்ந்துதின் |
|
றந்து ளும்1
மக ழங்கணத் தூடுமாய்ச் |
|
சந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே |
(இ-ள்.)
சந்திரமதி நாய்-(பூர்வம்) சந்திரமதியாய் இருந்து பிறந்த நாய், மாசனம் உண்ட
பின் - மக்கள் உண்ட பிறகு, வந்து - (வெளியே) வந்து, குப்பையின் சிந்தும் எச்சில்
- குப்பைகளின்மேல் எடுத்தெறியும்எச்சில் உணவு களை, சென்று - அங்குப்போய், கவர்ந்து
தின்று - ஆவலுடன் கவ்வித் தின்று, அந்துளும் - அந்தப்புரத்திலும், அகழ் அங்கணத்து
ஊடும் ஆய் -தோண்டப்பெற்ற ஜலதாரைகளின் இடையிலும், தளர்கின்றது - வருந்தி மெலிகின்றது.
சந்திரமதி,
ஈண்டு நாயாகி எச்சில் உண்டு சாக்கடை முதலிய இடங்களில் தங்கி மெலிகின்ற தென்க.
சந்திரம்மதி, விகாரம். அந்த; உள் - அந்துள் என்றாயது
போலும், அங்கணம் - ராஜாங்கணம் எனவுமாம்.*
(9)
164. |
நல்வ தத்தொ டறத்திற நண்ணலார |
|
கொல்வ தற்குள முன்செய் கொடுமையான |
|
ஒல்வ தற்கரு மாதுய ருற்றனர் |
|
வெல்வ தற்கரி தால்வினை யின்பயன். |
(இ-ள்.)
(யசோதர மன்னனும் தாயும்), நல்வதத்தொடு அறத்திறம் நண்ணலார் - சிறந்த விரதத்தோடு
சீலம் முதலியவைகளை ஏலாதாராகி, முன்-முன்னம், கொல்வதற்கு உளம் செய் கொடுமையான்
- பலியிட மனத்தால் நினைத்த தீவினையால், ஒல்வதற்கு அரும் - பொருந்துதற்கரிய,
மாதுயர் உற்றனர் - மிக்க துயரம் உற்றனர், (ஆதலின்), வினையின்
1 அந்துணும்.
*
ஸ்ரீ புராணம், |
|