- 205 -

பயன் - தீவினையின் பயன், வெல்வதற்கு அரிது - (முனிவர்க்கு அன்றி ஏனையோர்க்கு) வெல்வதற்கு அருமையாகும் (எ-று.)

மன்னனும் தாயும் தீவினையினால் பொறுத்தற்கரிய துன்ப மடைந்தார்களென்க.

வதம் - விரதம். உளம் முன்செய் கொடுமை, எண்ணத்தாலீட்டிய தீவினை; ‘உயிரவணில்லையேனும் உயிர்க்கொலை நினைப்பினால்‘ என்பர் (245) முன்னரும்.  ‘எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை, வீயாது பின்சென்றடும்‘ என்றார் (குறள், 207) தேவரும்.  (10)

165.  மற்றொர் நாண்மணி மண்டபத் தின்புடை
  யற்ற மாவிருந் தட்டபங் கன்றனை
  முற்று வார்முலை யாண்முயங் குந்திறம
  மற்ற மாமயில் வந்தது கண்டதே.

   (இ-ள்.) மற்று ஓர் நாள் - பின் பொருநாள், மணி மண்டபத்தின் புடை - அழகிய மண்டபத்தின் பக்கத்தே, அற்றம் ஆ இருந்து - மறைவாக இருந்து,  வார் முற்று முலையாள் - கச்சு அணிந்த பூர்ணமாக வளர்ந்த முலையினளான அமிர்தமதி, அட்டபங்கன்தனை - அட்டபங்கன் என்னுஞ் சோர நாயகனை,  முயங்கும் திறம் - புணரும் செயலை, வந்தது அ மாமயில்கண்டது - அங்கு  வந்ததாகிய அந்தச் சிறந்த பெரிய மயில் பார்த்தது. (எ-று.)

  சோரநாயக னுடனிருந்த அரசியை மயில் கண்ட தென்க.

  ‘வார் முலையாள்‘ என்றது, முன்னைய நிலைமையினைக் கருதி.  மற்று, அசை.     (11)

166.  அப்பி றப்பி லமர்ந்த1 தன் காதலி
  ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின
  தப்பி லன்னது2 சாரன்றன்3 கண்களைக்
  குப்பு றாமிசைக் குத்தி யழித்ததே.

 

1 னமர்ந்த.

2 வல்லது.

3 சாரனொண்.