பயன் - தீவினையின் பயன், வெல்வதற்கு அரிது - (முனிவர்க்கு
அன்றி ஏனையோர்க்கு) வெல்வதற்கு அருமையாகும் (எ-று.)
மன்னனும் தாயும்
தீவினையினால் பொறுத்தற்கரிய துன்ப மடைந்தார்களென்க.
வதம் - விரதம். உளம் முன்செய் கொடுமை, எண்ணத்தாலீட்டிய
தீவினை; ‘உயிரவணில்லையேனும் உயிர்க்கொலை நினைப்பினால்‘ என்பர் (245) முன்னரும்.
‘எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை, வீயாது பின்சென்றடும்‘ என்றார் (குறள்,
207) தேவரும். (10)
165. |
மற்றொர் நாண்மணி மண்டபத் தின்புடை |
|
யற்ற மாவிருந் தட்டபங் கன்றனை |
|
முற்று வார்முலை யாண்முயங் குந்திறம |
|
மற்ற மாமயில் வந்தது கண்டதே. |
(இ-ள்.)
மற்று ஓர் நாள் - பின் பொருநாள், மணி மண்டபத்தின் புடை - அழகிய மண்டபத்தின்
பக்கத்தே, அற்றம் ஆ இருந்து - மறைவாக இருந்து, வார் முற்று முலையாள் - கச்சு அணிந்த
பூர்ணமாக வளர்ந்த முலையினளான அமிர்தமதி, அட்டபங்கன்தனை - அட்டபங்கன் என்னுஞ்
சோர நாயகனை, முயங்கும் திறம் - புணரும் செயலை, வந்தது அ மாமயில்கண்டது - அங்கு
வந்ததாகிய அந்தச் சிறந்த பெரிய மயில் பார்த்தது. (எ-று.)
சோரநாயக னுடனிருந்த
அரசியை மயில் கண்ட தென்க.
‘வார் முலையாள்‘ என்றது, முன்னைய நிலைமையினைக் கருதி.
மற்று, அசை. (11)
166. |
அப்பி றப்பி லமர்ந்த1
தன் காதலி |
|
ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின |
|
தப்பி லன்னது2
சாரன்றன்3 கண்களைக் |
|
குப்பு றாமிசைக் குத்தி யழித்ததே. |
1
னமர்ந்த.
2
வல்லது.
3
சாரனொண்.
|
|