- 208 -

மயில் மடிந்த காரணம் அறியாத யசோமதி நாயைக் கொன்றா னென்க.

இனி, பொன்றின மன்னவன் ஆயுமாறு அறியாத என்று நேரே கொண்டு பொருள் கூறவுமாம்.  இப்பொருளில், மன்னவன் - மன்னவனை என்க.  போற்றின மன்னவன் என்ற பாடத்திற்கு, நாயை இரட்சித்த மன்னவன் என்று பொருள் கொள்க.  ‘நாய் பெய் பலகை‘; நாய், சூதாடுகாய்.  பலகை - சூதாடு பலகை.      (15)

யசோதரனாகிய மயில் (2வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்

170.  மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி
  துன்னுஞ் சூழலுட் சூழ்மயிர் முள்ளுடை
  இன்னல் செய்யுமோ ரேனம தாகிய
  தன்ன தாகு மருவினை யின்பயன்..

(இ-ள்.) மன்னன் மாமயில் வந்து - மன்னனாயிருந்த மயில் (இறந்து) மீண்டும் வந்து, விந்தக் கிரி துன்னுஞ் சூழலுள் - விந்த்யகிரியைச் சார்ந்த நெருங்கிய மலைச் சாரலில், இன்னல் செய்யும்-(பிற உயிர்களுக்குத்) தீங்கு செய்யும், சூழ்மயிர் முள்ளுடை - (உடல்) முழுவதும் முள்மயிருடைய, ஓர் ரனமது ஆகியது - ஒரு பன்றியாய்ப் பிறந்தது; அருவினையின் பயன் - விலக்குதற்கரிய தீவினையின் பலன், அன்னது ஆகும் - அத்தன்மையதாகும். (எ-று.)

மயில், மறு பிறப்பில் முள்ளம்பன்றி யாயிற்றென்க.

கிரி - மலை.  துன்னுஞ்சூழல், மரங்கள் சூழ்ந்து நெருங்கியுள்ள இடம். ‘சூழ்மயிர் முள்ளுடை ஏனம்‘  எனவே, முள்ளம்பன்றி யாயிற்று.  ஏனம் - பன்றி.         (16)

171.  சந்தி ரம்மதி நாயுமச் சாரலின்
  வந்து காரிருள் வண்ணத்த நாகமாய
  அந்தி லூர்தர வேர்த்துரு ளக்குடர்
  வெந்தெ ழும்பசி விட்டது பன்றியே.

(இ-ள்.) சந்திர மதி நாயும் - சந்திரமதியாகிய நாயும், அச்சாரலின் வந்து - அவ் விந்த்யமலைச் சாரலில