(யசோதரனாகிய ஆடு) துடி துடித்து, உயிர்போய பின் உயிர் நீங்கியபின், தாய் வயிற்றினில்
தாதுவில் சார்ந்தது-(தான் புணர்ந்த) தாயின் கருவில் சேர்ந்த தன் விந்துவில்அடைந்தது.
(எ-று.)
தாயைப் புணர்ந்த (யசோதரனாகிய) ஆணாட்டின் உயிர் தன் விந்துவில் சார்ந்தது என்க.
பாய்ந்தது வன்தகர் ஆதலின் இது இறந்தது. (28)
183. |
தாய்வ யிற்கரு வுட்டக ராயது |
|
போய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன |
|
மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன |
|
தாயை வாளியிற் றானுயிர்1 போக்கினான். |
(இ-ள்.) தாய் வயின் கருவுள்போய் - (யசோதரன்) தாயிடத்துக்
கருவில் சார்ந்து, தகராய் அது வளர்ந்துழி - மீட்டும் ஆணாடாகிக் கருமுற்றி வளர்கையில்,
பூமுடி மன்னவன்- அழகிய முடியணிந்த யசோமதி, மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன்- அமைந்த
வேட்டைமேல் விரும்பிச் சென்று மீள்பவன், தாயை - (கருமுற்றிய) தாய் ஆட்டினை, தான்
வாளியின் உயிர் போக்கினான் - தானே தன் கை அம்பினால் கொன்றான். (எ-று.)
கரு முற்றிய ஆட்டை மன்னன் கொன்றானென்க. தாய் வயின் - தாயிடத்தே; வயின்,
ஏழனுருபு. (29)
184. |
வாளி1 வாய்விழும்
வன்றகர்க் குட்டியை |
|
நீள நின்ற புலைக்குலத் தோன்றனைத் |
|
தாள்வ ருத்தந் தவிர்த்து வளர்க்கென |
|
ஆளி மொய்ம்ப னருளின னென்பவே. |
(இ-ள்.) ஆளிமொய்ம்பன் -
சிம்மம்போலும் வலிமையுள்ளவனான யசோமதி, நீள நின்ற புலைக் குலத்தோன்தனை - சிறிது
தொலைவில் நின்ற புலையனை விளித்து,
1
வாளினிற்றன்னுயிர்.
1
வாளின்(184) |
|