வாளி வாய் விழும் தகர்க் குட்டியை - அம்பு பாய்ந்த வழியாக வந்த விழுந்த வலிய ஆட்டுக்குட்டியை,.
தான் வருத்தம் தவிர்த்து - (இதன் தாய் ஆட்டை) முயன்று வளர்த்த வருத்தத்தை விடுத்து,
வளர்க்க என அருளினன்-வளர்ப்பாயாக வென்று கருணையால் உத்தரவு செய்தான்.
மன்னன், தகர்க்குட்டியை வளர்க்கும்படி புலையனிடம் அருளினானென்க.
அரசனுக்குக் கருணை பிறந்தமையால், ‘அருளினன்' என்றார்.
தாள் - முயற்சி. முயன்று வளர்த்த ஆட்டைக் கொன்ற வருத்தம் விட்டு, இக்குட்டியை
வளர்க்க என்றற்கு, ‘தான் வருத்தம் தவிர்த்து' என்றார்.
வாளி - பாணம்; வாதிராஜரும் ‘ஸாணெந' என்றே
கூறியிருத்தலால் ‘வாளி' என்ற
பாடமே கொள்ளப்பட்டது. (30)
யசோமதி
பலியிடும் செய்தி கூறல்
185. |
மற்றொர் நாண்மற மாதிற்கு மன்னவன் |
|
பெற்றி யாற்பர விப்பெரு1
வேட்டைபோய் |
|
உற்ற பல்லுயிர் கொன்றுவந் தெற்றினான்2 |
|
கொற்ற மிக்3கெரு
மைப்பலி யொன்றரோ. |
(இ-ள்.) மற்று ஓர் நாள் - பின் பொருநாள், மன்னவன் - யசோமதி,
மறமாதிற்கு -சண்டமாரிக்கு, பெற்றியால் பரவி - முறைப்படி வணங்கி, பெரு வேட்டைபோய்
- பெரியவேட்டைமேற்சென்று, உற்ற - தன்னிடம் அகப்பட்ட, பல் உயிர் கொன்று - பல
பிராணிகளைக் கொன்று,வந்து - திரும்பி மாரிகோயில் வந்து, கொற்றம் மிக்க - வலிமிக்க,
எருமைப்பலி ஒன்று ஏற்றினான் - எருமை ஒன்றைப்பலியாகக் கொன்றான். (எ-று.)
மன்னன், மாரிக்கு
எருமைப்பலி யிட்டா னென்க.
வீரமகளாதலின், ‘மறமாது‘ எனப்பட்டாள். மறம் - வீரம் - கொன்று உவந்து எனவும்
பிரித்துக் கூறலாம். பலி
1 பொரு
2 தேற்றினான்
3 கொற்றவிக் |
|