- 218 -

யிட்ட தினம், ‘மஹாலய அமாவாசை‘ யென்பர் கன்னட காவியத்தார். அரோ, அசை.      (31)

186.  இன்றெ றிந்த வெருமை யிதுதனைத்
  தின்று தின்று சிராத்தஞ் செயப்பெறின்
  நன்றி தென்றன ரந்தணர் நல்கினார
  நின்று பின்சில நீதிகள் ஓதினார்.

(இ-ள்.) அந்தணர் - வேதியர் (வேந்தனிடம்), இன்று எறிந்த - இன்று பலியிட்ட, எருமை இதுதனை - இவ் வெருமையின் ஊனை, தின்று தின்று - --, சிராத்தம் செயப்பெறின் - நின்குல முன்னோர்களுக்குச் சிராத்தம் செய்யப் பெறுமானால், இது நன்று என்றனர் நல்கினார்- இது நன்று என்று விரும்பிக்கூறினார்;  பின் -பிறகு, நின்று சில நீதிகள் ஓதினார்- அரசன்முன் நின்று மீண்டும் சில நீதிகளைக் கூறினார்கள். (எ-று.)

எருமையூன் சிராத்தத்திற்கு ஆகுமென வாங்கி, மீண்டும் சில நீதி கூறுகின்றன ரென்க.

நல்குதல் - விரும்புதல். ‘நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய்‘  (மணி. 12 : 56)  என்பது காண்க.  தின்று தின்று, அடுக்கு. சிலர் என்றும் பாடம். (32)

187.  ஆத பத்தி லுலர்ந்ததை யாதலாற்
  காது காகங் கவர்ந்தன வாமெனின்
  தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கென
  ஓதி னாரினி யொன்றுள தென்றனர்.

    (இ-ள்.) (இவ்வெருமையூன்), ஆதபத்தில் உலர்ந்தது-வெயிலில் உலர்ந்தது:   ஆதலால் - ஆதலின், (அதனை) காது காகம் கவர்ந்தன ஆம் எனின் - தாக்குகின்ற காகங்கள் கவர்ந்து எச்சிலாக்கின என்றால், தாம் சிராத்தம் செயற்கு - தாங்கள் சிராத்தம் செய்வதற்கு. தீது என-தீதாகு மென்று, ஓதினார் - கூறினார் (பின் அவர்கள்), இனி - இனி இதற்குப் பரிகாரம், ஒன்று உளது - --, என்றனர்-என்று  சொல்லினர்.  (எ-று.)