எச்சிலான எருமையூன் சிராத்தத்திற்கு உதவாது. ஆயினம், இதற்குக் கழுவாய் ஒன்றுளது என்றனரென்க.
(33)
ஐ, அசை. காதுதல் - தாக்குதல்.
188. |
தீதி தென்ற பிசிதமுந் தேர்ந்துழி |
|
சாத நல்ல தகர்முகத் துப்படின |
|
பூத மென்றனர் புண்ணிய நூல்களின் |
|
நாத னாரத் துராதிக ணன்றரோ. |
(இ-ள்.) புண்ணிய நூல்களின்
நாதனார் - நற்கருமங்களைக் கூறும் நூல்களைக் கற்றறிந்த தலைவர்கள், தேர்ந்துழி -
ஆராயுமிடத்து, தீது இது என்ற பிசிதம்உம் - (எச்சில் பட்டதனால் சிராத்தஞ் செய்வதற்குத்)
தோஷமாகுமென்று
கூறிய இவ்வெருமையூனும், நல்ல சாதம் தகர் முகத்துப்படின் - நல்ல பிறப்பினையுடைய ஆண்யாடு
ஒன்றின் வாயில் பொருந்துமாயின், அத்துராதிகள் - யாகம் முதலியவற்றிற்கு, நன்று
பூதம் என்றனர் - பெரிதும் பரிசுத்தமானதாகும் என்று கூறினார். (எ-று.)
நாதனார், இவ்வெருமையூன்
நல்ல தகரால் நுகரப்படுமாயின் புனிதமாகு மென்றன ரென்க.
பிசிதம் - மாம்ஸம். சாதம் - பிறவி; ஜாத என்னும் வடசொல்லின் திரிபு. தகர்
-செம்மறியாட்டுக் கிடாய். நல்லசாதம் தகர் என்றது, யோனியில் பிறவாத ஆட்டை;
இது கன்னட காவியத்தால் அறியப்பட்டது. பூதம் - புனிதம் அத்வரம் - யாகம். அத்வராதி
என்பது, ‘அத்துராதி‘ என்றாயிற்று. ‘நன்று பெரிதாகும்‘ என்பது தொல்காப்பியம்.
189. |
என்ற லும்மிணர் பெய்முடி மன்னவன் |
|
நன்று நாமுன் வளர்க்க விடுத்தது |
|
சென்று தம்மெனச் சென்றன ரொற்றர்பின |
|
நன்றி தென்று நயந்தன ரந்தணர். |
(இ-ள்.) என்றலும் -என்றிவ்வாறு
அத் தலைவர்கள் கூறியதும், இணர்பெய்முடி மன்னவன் - பூங்கொத்துக்களால்
|