- யான் உபயோகித்த பாத்திரங்கள்; இவர் என் உழையாளர் ஆம் - இவர்கள் என் ஏவலர்களாவர்;
இவண் - இவ்விடத்தே, யான் - யான்மட்டிலும், இன்னணம் ஆயது இது என் - இல்வண்ணம்
ஆடு ஆகிய இத்தன்மை யாது காரணம்! (எ -று.)
இந்நகரம் முதலியன
என்னுடையனவேயாக, யான் மட்டும் ஆடாகியது யாது காரணமென்று யசோதரன் எண்ணினானென்க.
மாநகராகிய உஞ்சயினிப்பதி உழைக்கலம் - பொன், வெள்ளி முதலியவற்றாற் செய்த பாத்திரங்கள்.
‘உழைக்கலமேந்தி‘ என்றார் (பெருங். 319) கொங்கு வேளிரும். இது எலாம் - ஒருமைப்பன்மை
மயக்கம். உழையாளர் - அருகிலிருப்போர்; அமைச்சர் எனவுமாம். அமாத்யன் என்பர்
வடமொழியில். (அமா - பக்கம்.)
(38)
193. |
யான்ப டைத்த பொருட்குவை யாமிவை |
|
யான்வ ளர்த்த மதக்களி றாமிவை |
|
யான ளித்த குலப்பரி யாமிவை |
|
யான்வி ளைத்த வினைப்பய னின்னதே. |
(இ-ள்.) இவை - இவையாவும். யான் படைத்த பொருட்குவை ஆம் - யான்
ஈட்டிய செல்வக் குவியல்களாகும்; இவை - --, யான் வளர்த்த - --, மதக் களிறு ஆம்
- மதஞ் செறிந்த யானைகளாகும்; இவை - --, யான் அளித்த குலப்பரியாம் - யான் காப்பாற்றிய
உத்தம விலக்கணக் குதிரைகளாகும்; யான் விளைத்த - யான் ஆக்கிய, வினைப்பயன் -
வினையின் பயன், இன்னது - ஆடாகிய இத்தன்மையாயது. (எ-று.)
இவை யாவும்
இங்ஙனம் அழியாதிருக்க, யான்மட்டிலும் ஆடானது என் வினைப்பயனேயென்று யசோதரன் எண்ணினானென்க.
களிறு பரி என்னும் சொற்கள் தொகுதியொருமை; ஜாத்யேக வசனம். (39)
|