194. |
இவர்க ளென்கடைக் காவல ராயவர்1 |
|
இவர்க ளென்படை நாயக ராயவர்2 |
|
இவர்க் ளென்னிசை பாடுந ராடுநர் |
|
இவர்க ளும்மிவ ரென்பரி வாரமே. |
(இ-ள்.) இவர்கள் - --, என்
கடைக் காவலர் ஆயவர் - என் அரண்மனை வாயில் காத்த காவலாரானவர்; இவர்கள் - --,
என் படை நாயகர் ஆயவர் - என் சேனைத்தலைவர்களா யிருந்தவர்; இவர்கள் - --, என்
இசை பாடுநர் - என் புகழை இசைத்துப் பாடுபவர்; இவர்களும் - --, ஆடுநர் - நடன மாதர்களாவர்;
இவர் என் பரிவாரம் - இவர்கள் என்பரிசனங்களாவர். (எ-று.)
இவர்களனைவரும் என்னைச்சார்ந்தவர்களே என்றெண்ணினா னென்க.(40)
195. |
என்னை நஞ்சுபெய் தின்னண மாயிழைத் |
|
தன்ன மென்னடை யாளமிர் தம்மதி |
|
மன்னு தன்மறை யானொருட வைகுமோ |
|
என்னை செய்தன ளோவிவ ணில்லையால். |
(இ-ள்.) அன்ன மெல் நடையாள் - அன்னம்போலும் மென்மையான நடையி்னை
யுடையளான, அமிர்தமதி - --, என்னை - --, நஞ்சுபெய்து - விஷமிட்டுக்கொன்று, இன்னணமாய்
இழைத்து - இவ்வாறு துன்பமுறச் செய்து, மன்னும் தன்மறையானொடு - தன்னைச் சேர்ந்த
சோரநாயகனுடன், வைகுமோ - காலங் கழிக்கின்றளோ! (அல்லது), என்னை செய்தனளோ -
வேறு யாது செய்தாளோ! இவண் இல்லையால் - இவ்விடத்தே காணப்படவில்லையே! (எ-று.)
அமிர்தமதி,
நம்மை நஞ்சூட்டிக் கொன்றபின் யாதுசெய்தாளோ என்று ஐயுற்றானென்க.
இழைத்த என்று பிரித்தால் அசரம் தொக்கதென்று கொள்க.
மன்னுதல் - நிலையாயிருத்தல். என்ன என்றும் பாடம். அமிர்தம்மதி, விகாரம்.
(41)
1
ராபவர், ராமவர்,
2
ராமிவர். |
|