- 229 -
  கரண மானவை யாவுங் களைந்தனர்
  அரண மாமற னில்லது தன்னையே.

(இ-ள்.) (பின்), அரசன் ஆணை அறிந்து - அரசனது கட்டளையை அறிந்து, அருள் இல்லவர் - அருளிலராகிய ஏவலர், அரணம் ஆம் -(உயிர்களுக்குக்) காவலாகிய, அறன் இல்லது தன்னை - அறத்தின் துணையிலாத அவ்வெருமையை, சரணம் நான்கினை உம் - நான்கு கால்களையும், தளை செய்தனர் - இறுகக்கட்டி, கரணமானவை யாவும் - (பண்டங்களை ஏற்றுதற்குரிய) கருவிகளையெல்லாம், களைந்தனர் - நீக்கினர்.

ஏவலர், எருமையைப் கைப்பற்றின ரென்க

சரணம் - கால்,  தளை - கட்டுதல். கரணம் - உபகரணம். களைதல் -  நீக்குதல். மேற் செய்யுளில், ‘மயிடமும் பிணி செய்து வருக’, என்று அரசன் கூறியிருப்ப. ஏவலர் அதனைப் பலவாறு வருத்திக் கொன்றன ரென்பது முன்வருஞ் செய்யுட்களால் அறியப்படுதலின், பின்னர் அரசன் அவ்வாறு  ஆணையிட்டான் ஆவன்; அதனையே, ‘ஆணை அறிந்து’ என்றார் எனக் கொள்க.  இனி, ஏவலரே கொன்றார் என்பதற்கு அருளில்லவர் என்றா ரெனினுமாம்.

205.  கார நீரினைக் காய்ச்சி யுறுப்பரிந்
  தார வூட்டி யதன்வயி றீர்ந்தவர்1
  நெய்பெய் சலாகை கடைந்தபின்
  கூர்முண் மத்திகை யிற்கொலை செய்தனர்.

(இ-ள்.) அவர் -அந்த ஏவலர், உறுப்பு அரிந்து - (அவ்வெருமையின் காது முதலிய) உறுப்புக்களை அரிந்து, காரநீரினை - காரநீரை, அதன் வயிறு ஆர ஊட்டி - அவ் வெருமையின் வயிறு நிறையும் படி செலுத்தி, காய்ச்சி - (கீழே எரித்து) அந்நீர் கொதிக்கும்படி செய்து, ஈர்ந்து - (வயிற்றை) வாளால் அறுத்து, சாரநெய்பெய் சலாகை - சாரமான நெய் ஊற்றிக் காய்ச்சிய இருப்புக்கோலால், கடைந்தபின் - (அவ்) வயிற்றில் கடைந்த பிறகு, கூர்முள் மத்தி

1 தவண்.