xxxviii
கூறுநடைக்குழி கட்பகுவாயன பேயுகந்தாடநின் றோரியிட
வேறுபடக்குட
கத்திலையம்பல வாணனின்றாடல் விரும்புமிடம்
ஏறுவிடைக்கொடி
யெம்பெருமானிமை யோர்பெருமானுமை யாள்கணவன்
ஆறுசடைக்குடை
யப்பனிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே. 2
கொடிகளிடைக்குயில் கூவுமிடம்மயி லாலும்மிடம்மழு வாளுடைய,
கடிகொள்புனற்சடை கொண்டநுதற்கறைக் கண்டனிடம் பிறைத் துண்டமுடிச், செடிகொள்வினைப்பகை தீருமிடந்திரு வாகுமிடந்திரு மார்பகலத், தடிகளிடம்மழல் வண்ணனிடங்கலிக் கச்சியனேகதங்காவதமே. 3
கொங்குநுழைத்தன வண்டறைகொன்றையுங் கங்கையுந்திங்களுஞ்
சூடுசடை, மங்குனுழைமலை மங்கையைநங்கையைப் பங்கினிற்றங்க
வுவந்தருள்செய், சங்குகுழைச்செவி கொண்டருவித்திரள் பாயவியர்த்தழல்
போலுடைத்தம், அங்கைமழுத்திகழ் கையனிடங்கலிக் கச்சியனேகதங்
காவதமே. 4
பைத்தபடத்தலை யாடரவம்பயில் கின்றவிடம்பயி லப்புகுவார்
சித்தமொருநெறி வைத்தவிடந்திகழ் கின்றவிடந்திரு வானடிக்கே
வைத்தமனத்தவர் பத்தர்மனங்கொள வைத்தவிடம்மழு வாளுடைய
அத்தனிடம்மழல் வண்ணனிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே. 5
தண்டமுடைத்தரு மன்றமரென்றம ரைச்செயும்வன்றுயர் தீர்க்கும்மிடம்,
பிண்டமுடைப்பிற வித்தலைநின்று நினைப்பவராக்கையை நீக்குமிடம், கண்டமுடைக்கரு நஞ்சைநுகர்ந்தபி ரானதிடங்கட லேழுகடந்,
தண்டமுடைப்பெரு மானதிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே. 6
கட்டுமயக்க மறுத்தவர்கைதொழு தேத்துமிடங்கதி ரோனொளியால்
விட்டுமிடம்விடை யூர்தியிடங்குயிற் பேடைதன்சேவலொ டாடுமிடம்
மட்டுமயங்கி யவிழ்ந்தமலரொரு மாதவியோடு மணம்புணரும்
அட்டபுயங்கப் பிரானதிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே. 7
புல்லியிடந்தொழு துய்துமென்னாதவர் தம்புரமூன்றும் பொடிபடுத்த
வில்லியிடம்விர வாதுயிருண்ணும்வெங் காலனைக்கால்கொடு வீந்தவியக்
கொல்லியிடங்குளிர் மாதவிமவ்வல் குராவகுளங்குருக் கத்திபுன்னை
அல்லியிடைப்பெடை வண்டுறங்குங்கலிக் கச்சியனேகதங் காவதமே. 8
சங்கையவர்புணர் தற்கரியான்றள வேனகையாட விராமிகுசீர்
மங்கையவண்மகி ழச்சுடுகாட்டிடை நட்டநின்றாடிய சங்கரனெம்
அங்கையனல்லன லேந்துமவன்கனல் சேரொளியன்னதோர் பேரகலத்
தங்கையவன்னுறை கின்றவிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே. 9
வீடுபெறப்பல வூழிகணின்று நினைக்குமிடம்வினை தீருமிடம்
பீடுபெறப்பெரி யோரதிடங்கலிக் கச்சியனேகதங் காப்பனிடம்
பாடுமிடத்தடி யான்புகழூர னுரைத்தவிம்மாலைகள் பத்தும்வல்லார்
கூடுமிடஞ்சிவ லோகனிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே. 10
|
திருச்சிற்றம்பலம்
|