ஞானத்தெல்லை 3141; வளர் வெண்டிங்கள் மேய வேணியர்பால் ஞானம்
பெற்றவர் 2618; வேதபாரகன் 2812; வைதிக சூளாமணி 2771;
வையக முய்ய வந்த வள்ளலார் 2635.
  இடைச்சுரம் - 3023. தொண்டை நாட்டுப் பதிகளுள் ஒன்று.
  இந்திரநீல பர்ப்பதம் - 2925. வடநாட்டுப் பதிகளுள் ஒன்று.
 
இரும்பைமாகாளம் - 2862. தொண்டை நாட்டுப் பதிகளுள் ஒன்று
இலம்பையங்கோட்டூர் - 2902. தொண்டை நாட்டுப் பதிகளுள் ஒன்று.
உண்ணாமுலையாள் - 2868. திருவண்ணாமலையில் அம்மை பெயர்
ஏகாம்பரம் - 2843. காஞ்சிபுரம் திருக்கோயில். மாமரம் தலமரமாதலின் வந்த பெயர்.
கங்கை - 2549. ஆறு.
கச்சிமேற்றளி - 2899. கச்சிப் பல பதிகளுள் ஒன்று.
கச்சி அனேகதங்காவதம் - 2896. கச்சிப் பல பதிகளுள் ஒன்று.
கண்டுமுட்டு - 2581. புறச் சமயிகளைக் கண்டால் தீமை என்ற சமணர் கொள்கைக்கு வழங்கும் மரபுப் பெயர்.
கண்ணப்ப நாயனார் - 2911. அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவர்.
கண்ணன் - 2749. கிருட்டினன்.
கபாலீச்சரம் - 2974. திருமயிலாப்பூர்த் திருக்கோயிலின் பெயர்.
கம்பர் - 2857. திருஏகாம்பரத்தில் இறைவர் பெயர்
கன்னிநாடு - 2760. பாண்டி நாடு.
கன்னிமாவனம் - 2861. திருப்பாதிரிப்புலியூர்
காஞ்சி நெறிக்காரைக்காடு - 2898. கச்சிப் பல பதிகளுள் ஒன்று
காமக்கோட்டம் - 2896. காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மையார் தவஞ் செய்து அறம் வளர்க்கும் தனிக் கோயில்.
காரிகரை - 2912. தொண்டை நாட்டுத் தலம்; வைப்புத் தலங்களுள் ஒன்று, காளத்திக்குச் செல்லும் வழியில் உள்ளது.
காலன் - 2638. இ யமன்.
காழி - 2571. சீகாழி
காளத்தி - 2911. தொண்டை நாட்டுப் பெரும் பதியாகிய மலை.
காளன் - 2918. திருக்காளத்தியில் இறைவரைப் பூசித்த பாம்பு.
கானப்பேர் - 2784. பாண்டி நாட்டுப் பதிகளுள் ஒன்று.
குரங்கணின் முட்டம் - 2882. தொண்டை நாட்டுப் பதிகளுள் ஒன்று.
குற்றாலம் - 2784. பாண்டி நாட்டுப் பதிகளுள் ஒன்று.
குறும்பலா - 2784. பாண்டிநாட்டுப் பதிகளுள் ஒன்று.
கேட்டுமுட்டு - 2582. கேட்கத் தகாத புறச்சமய வார்த்தையை கேட்டால் வரும் தீமைபற்றிச் சமணர் கொள்ளை குறிக்க வழங்கும் மரபுப் பெயர்.
குலச்சிறையார் - 2543. நெடுமாறனாரது மந்திரியார்.
கொள்ளம்பூதூர் - 2796. சோழநாட்டுப் பதிகளுள் ஒன்று.
கோகரணம் - 2925. துளுவநாட்டுப் பதி.
கௌரியர் தலைவன் - 2611. பாண்டியர்.