| திருமுதுகுன்றம் - 3255. நடுநாட்டு 9-வது பதி. இங்கு இறைவர்பாற் பெற்ற 12000 
 பொன்னையும் நம்பிகள் திரு மணிமுத்தாற்றினிற் புகவிட்டுத் திருவாரூர்க் குளத்தில் 
 இறைவரருளாற் பெற்று எடுத்தனர். | 
 
 | திருமாற்பேறு - 3349. தொண்டை நாட்டு 13-வது பதி. | 
 
 | வடதிருமுல்லைவாயில் - 3431. தொண்டை நாட்டு 22-வது பதி. | 
 
 | திருமேற்றளி - 3344. காஞ்சிபுரத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தனிக் 
 கோயில். தொண்டை நாட்டு 2-வது பதி. | 
 
 | திருமூலட்டானம் - (திருவாரூர்) 3279. திருவாரூர்ப் பூங்கோயிலில் புற்றிடங் 
 கொண்ட பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம். | 
 
 | திருமூலதேவ நாயனார் - 3563. (63) நாயன்மார்களுள் ஒருவர். "நம்பிரான் 
 றிருமூலர்" என்று திருத்தொண்டத் தொகையுள் நம்பிகளால் விதந்து போற்றப் பெற்றவர். 
 திருமந்திரமாலை 3000 அருளியவர். | 
 
 | திருவதிகை வீரட்டானம் - 3569. நடுநாட்டில் 7வது பதி. | 
 
 | திருவரத்துறை - 3448. நடுநாட்டில் 1வது பதி. | 
 
 | திருவல்லம் - 3349. தொண்டை நாட்டில் 10வது பதி. | 
 
 | திருவன்பார்த்தான் பனங்காட்டூர் - 3347. தொண்டை நாட்டு 9வது பதி. | 
 
 | திருவாத்தி - 3700. திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத் திருக்கோயிலினுள் 
 உத்தராபதியார்எழுந்தருளிய ஆத்திமரம். | 
 
 | திருவாமாத்தூர் - 3446. நடுநாட்டு 21-வது பதி. | 
 
 | திருவாரூர் - 3262. சோழ நாட்டுப் பெரும் பதி. ஆளுடைய நம்பிகளுக்குப் பெருக 
 அருளிய பதி. | 
 
 | திருவூறல் - 3437. தொண்டை நாட்டு 12வது பதி. | 
 
 | திருவெஞ்சமாக்கூடல் - 3246. கொங்கு நாட்டில் தேவாரப் பாடல்பெற்ற பதிகளுள் 
 ஒன்று. வெஞ்சன் என்ற சிற்றரசன் ஆண்டதனால் இப் பெயர்பெற்றது. | 
 
 | திருவெண்காட்டு நங்கையார் - 3676. சிறுத்தொண்டநாயனாரின் தேவியார். | 
 
 | திருவெண்ணெய் நல்லூர் - 3338. ஆளுடைய நம்பிகளை இறைவர்ஓலைகாட்டி வழக்கிட்டு 
 ஆளாகக் கொண்ட பதி. நடுநாட்டில் 14வது பதி. | 
 
 | திருவெண்பாக்கம் - 3432. தொண்டை நாட்டில் 17வது பதி. நம்பிகளுக்கு இறைவர் 
 ஊன்றுகோ லருளிய பதி. இத்தலம் இப்போது பாண்டி (பூண்டி) நீர்த்தேக்க ஏரியினுள் அமிழ்ந்துள்ளது. | 
 
 | திருவேற்காட்டூர் - 3671. தொண்டை நாட்டு 23வது பதி. மூர்க்கநாயனாரது பதி. | 
 
 | திருவெற்றியூர் - 3353. தொண்டை நாட்டு 20வது. பதி. புவியுட் சிவலோகம் 
 போல்வது. | 
 
 | நிதிக்கோமான் - 3168. குபேரன். | 
 
 | பரவையார் - 3280. ஆளுடைய நம்பிகளின் தேவிமா ரிருவருள் முதல்வர். | 
 
 | பழையனூர்த் திருவாலங்காடு - 3436. தொண்டை நாட்டு 15வது பதி. | 
 
 | புலியூர் (தில்லை) 3264. சிதம்பரம். | 
 
 | பூங்கோயில் - 3602. திருவாரூரில் இறைவரது கோயிலின் பெயர். | 
 
 | பொதியமலை - 3565. தென்றிசையில் அகத்திய மாமுனிவர் எழுந்தருளியிருக்கும் 
 மலை. தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. | 
 
 | மூர்க்கநாயனார் - 3617. (63) நாயன்மார்களுள் ஒருவர். | 
 
 |  |