சிவமயம்

தெய்வீகச் சான்றுகள் சிலவற்றின் குறிப்புக்கள்

1. திருக்காளத்தி;- சுவாமியின் மூல லிங்கத் திருமேனியில் இடது கண்ணும்
அதன்கீழ் இரத்தத் துளிகள் சிந்திய தோற்றமும் இன்றும் காணலாம்.
2. பொன்முகலி ஆறு;- சித்தூர் சந்திரகிரி முதலிய இடங்களிலிருந்து வரும்
இந்த ஆறு வேனிற் காலத்தில் மேலும் கீழும் வறண்டு போனாலும் திருக்காளத்தி
அண்மையில் காளத்திக்குத் தெற்கே 3 நாழிகையும் வடக்கே 3 நாழிகையும் அளவில்
தண்ணீர் கண்டுவற்றாமல் நீர் ஓடிக்கொண்டிருப்பது இன்றும் காணத்தக்கது.
3. பழய மண்டபங்களில் கண்ணப்ப நாயனாரின் தந்தை, தாய் இவர்களின்
உருவங்கள் காண உள்ளன.
இக் குறிப்புக்கள் மேற்படி கோயில் திருப்பணி செய்த பெரியார் மெ.
இராமநாதன் செட்டியாரவர்களின் தவப் புதல்வர்களின் ஒருவரான திரு. மெ.
அரு. நா. கண்ணப்ப செட்டியாரவர்களால் தரப்பட்டன.