முற்சேர்க்கை - 1 |
உ
சிவமயம் |
திருச்சிற்றம்பலம் |
பெயர் விளக்கம் (VII பகுதி)
- - - - - |
அதிகன் - 3958. கருவூர்ப்பக்கத்தில் மலையரணத்துள்
அரசாண்ட சிற்றரசன்.
புகழ்ச் சோழருக்குத் திறைகொடாது மறுத்துப் போர்புரிந்து தோற்றோடினன்.
|
அதிபத்தர் - 3991. அறுபத்துமூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.
|
அநபாயன் - 3949. குலோத்துங்கச்சோழர் II.
ஆசிரியரைக்கொண்டு
இப்புராணம் இயற்றுவித்து முறை வகுத்த பெருமகனார்.
|
அயிராவதக் களிறு - 3947. இந்திரனது
வெள்ளையானை.
|
அறுவையர் குலம் - 4193. துணிநெய்வோர் குலம்;
சாலியர் என்பவர்.
|
ஆதித்தன் புகழ்மரபு - 4111. ஆதித்தச் சோழர்
மரபு.
|
ஆதிரை நாள் - 3886. சிவனுக்குகந்த நாள்; திருவாதிரை.
|
ஆழித்தேர் - 4122. திருவாரூர்த் தேர்.
|
இசைஞானிப் பிராட்டியார் - 4288. நம்பியாரூரருடைய
தாயார்.
|
இடங்கழியார் - 4108. அறுபத்துமூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.
|
இருக்குவேளூர் - 4055. கணம்புல்ல நாயனாரது பதி.
வடவெள்ளாற்றுத்
தென்கரையில் உள்ளது. சேலம் சில்லாவில் உள்ளது. பேளூர் என வழங்குவது.
|
இருக்குவேள் மன்னர் - (வேளிர்) - 4116. ஒரு
அரச மரபு.
|
உதியர் - 3775. சேரர்.
|
எருத்கத்தம்புலியூர் - 4215. நடுநாட்டுப் பதி.
திருநீலகண்ட யாழ்ப்பாண
நாயனாரது பதி.
|
ஐயடிகள் காடவர்கோன் - 4015. பல்லவச்சோழர்.
அறுபத்துமூன்று
நாயன்மார்களுள் ஒருவர். சைவத்திருநெறியா லரசளித்தவர்; அரசாட்சி இன்னலென
இகழ்ந்து துறந்து பதிதோறும் சென்று ஓர் ஓர் வெண்பாப் பாடினார். அவை
க்ஷேத்திரத் திருவெண்பா
என்னும் நூலாகத் தொடுக்கப்பட்டிருக்கின்றன.
|
கணநாதர் - 3922. அறுபத்துமூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.
|
கணம்புல்லர் - 4083. மேற்படி.
|
களந்தை - 3930. கூற்றுவ நாயனாரது பதி.
|
கமலவதி - 4203. கோச்செங்கட்சோழ நாயனாரது
தாயார்.
|
கருவூர் - 3953. கொங்குநாட்டுப்பதி. சோழர்களது
தலைநகரங்களுள் ஒன்று.
புகழ்ச்சோழ நாயனார் சரிதம் நிகழ்ந்த பதி.
|
கலிக்கம்பர் - 4011. அறுபத்துமூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.
|
கலிநீதியார் - 4021. மேற்படி |