“ஆனேற்றுக் கொடியோன்போ லெதிரிய விலவமும் ஆங்கத்
தீதுதீர் சிறப்பி னைவர்க ணிலைபோலப்
போதவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற
நோதக வந்தன்றா லிளவேனின் மேதக” |
என்னும் பாலைக்கலியின் கருத்தையும் மேற்கொண்டுள்ளன.
“கொய்ம்மலர்க் குடுமிச் சேவல் கோழிளந் தகர்போர் மூட்டி”
“ஆறிடு மதமால் யானைப் பழுக்குலை யவரை” |
“பாய தொன்மரப் பறவைபோற் பயன்கொள்வான் பதினெண்
டேய மாந்தருங் கிளந்தசொற் றிரட்சிதான்” |
“கதிர்கலம் பெய்காட்சி போலுதிர் பழம்” |
என்னும் இந்நூற் செய்யுட் பகுதிகள்,
“கோட்டிளந் தகர்களுங் கொய்ம்மலர் தோன்றி போற்
சூட்டுடைய சேவலும் . . . போர்க்கொளீஇ” |
“பொருவில் யானையின் பழுப்போற் பொங்கு காய்க்குலையவரை” |
“முட்டிலா மூவறு பாடை மாக்களாற்
புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய” |
“புதுக்கலம் போலும் பூங்கனியால்” |
என்னும் சிந்தாமணிச் செய்யுட் பகுதிகளை முறையே ஒத்துள்ளன.
“வஞ்சவினைக் கொள்கலனா முடலைத்தீவாய் மடுக்கிலேன்
வரையுரூண்டு மாய்ப்பே னல்லேன்” |
“மழலைதேறாச் சிறியனா மொருமதலை கையிற்கொண்ட
செம்பொன்மணி வள்ளம்போற் றேவர் யார்க்கும்
அறிவரியாய் சிறியேனை யௌ¤வந்தாண்ட வருமையறியேன்” |
“முன்னா முதுபொருட்கு முன்னா முதுபொருளாய்ப்
பின்னாம் புதுமைக்கும் பின்னாகும் பேரொளியாய்" |
“மண்ணாய்ப் புனலாய்க் கனலாய் வளியாகி
விண்ணா யிருசுடரா யித்தனையும் வேறாகி” |
என்னும் வாதவூரடிகள் பரவுவனவாகவுள்ள இந்நூற் செய்யுட் பகுதிகள் முறையே,
“தீயில் வீழ்கிலேன் றிண்வரை யுருள்கிலேன்” |
“மையிலங்குநற் கண்ணிபங்கனே வந்தெனைப்
பணிகொண்டபின் மழக்
கையிலங்குபொற் கிண்ண மென்றலா லரியையென்
றுனைக் கருதுகின்றிலேன்” |
|