இவ்வுரையை எழுதி வந்த காலத்தும் பதிப்பித்த காலத்தும் ஆங்காங்கு
வேண்டிய உதவிகளைச் செய்த பெரியார்கட்கும் நண்பர்கட்கும் நன்றி
செலுத்துதலை உடையேன்.
இந்நூலைச் சென்னைப் பல்கலைக் கழகத்தார் அச்சிடுதற்குக் காரணராய்
இருந்த சொல்லின் செல்வர், தமிழ்ப் பேராசிரியர், உயர்திரு. ரா. பி.
சேதுப்பிள்ளை, B.A., B.L., அவர்கட்கும், தொடர்ச்சியாக வெளியிட்டு உதவி
வரும் சென்னைப் பல்கலைக் கழக அதிகாரிகட்கும் நன்றி
செலுத்துங்கடப்பாடுடையேன்.
|