தென்னாட்டுப்
புலவரே மிகச்சிறந்த
புலவரெனத்
தெரிந்து மெச்சிப்
பொன்னாரங் கோடிநிதி யுதவுகொங்கு
மண்டலத்தார்
பொருந்து மேன்மை
முன்னோர்பாற் செயும் பத்தி நல்லொழுக்க
முதற்குணங்கண்
முறை விளங்க
வொன்னாரும் மகிழ்சதக முயர்கார்மே
கக்கவிஞ
ருரைத் திட்டாரால்,
அனையதனை
யாய்வோர்க ளகமகிழக்
குறிப்புரையொன்
றமைத்தச் சேற்றி
வனையுநீ ருலகமெலா முலவவிடுத்
தோரெவரேல்
வையத்திற் சீர்
புனையுமொரு விவேகதிவா கரனையுதிக்
கச்செய்தோர்
புலவர்சூழுந்
தனைநிகர்செங் கோட்டுமுத்துச் சாமிக்கோ
னாரெனும்பேர்
தாம்பெற் றோரே.
|