நினைத்த
மாத்திரை மனம்புரி பவமெலாம் நீங்கும்
கனைத்த வாக்கினாற் புரிபவந் துதிக்குமுன் கழலும்
தனைத் தடங்கணாற் காணுமுன் உடற்பவந் தணக்கும்
அனைத்த மாண்பின தம்மசெங் குன்றெனு மசலம்
இம்ம
லைக்கணே வழிவழியெம்மை யாளுடைய
அம்மை யப்பனாந் தனிமுதல் அர்த்தநா ரீசன்
எம்மை வல்வரம் வேண்டினும் ஈந்து வீற்றிருக்கும்
கொம்மைமா மதிற் றிருக்கொடி மாடச்செங் குன்றூர்.
இத்த லத்தினன் விவேகதி வாகர னெனும்பேர்ப்
பத்தி ரத்தோடு சைவச மாசமும் பரிப்போன்
மெத்து சேதுப திமகா வேந்தருள் பரிசோன்
முத்து சாமிநா மத்தினன் சரிதநூல் முதல்வன் |