ஏனை
மண்டிலந் தம்மினும் வள்ளலர் புலவர்
மானவீரர்க ளருந்தவர் விம்மித மலிந்த
தான கொங்கு மண்டல சதகத்தினை யாய்ந்து
போன போனபல் லிடந்தொறும் புதுவது போற்றி.
ஆண்டு
பற்பல வொழிதர சிலையெழுத் தாதி
வேண்டு சாதன மைதிக மிவையெலா மிகுத்து
யாண்டு மொப்பிலா விளக்கமுங் கூட்டியிங் களித்தான்
ஈண்டு பேருப காரமிஃ தொப்பவே றெதுவே.
|