வேட்டெழுந்து   வடதிசை   நோக்கிச்   சென்றமையால்  விளங்கும்.
இளவரசில்  வைத்த  உடனே  இவன்,

'திசைஅரச ருக்குரிய திருவினைமு
           கப்பதொரு திருஉளம் அடுத்தருளியே'

என ஆசிரியர் கூறுமாறு காண்க.

இவன்   வடதிசையை  நோக்கிச்  சென்று,  போர்மேற்கொண்டிருந்த பொழுதே  சோழ  நாட்டில்  வீரராசேந்திரன்  இறந்தான்.

       'மாவுகைத்தொருதனி அபயன் இப்படி
           வடதிசை மேற்செல மன்னர் மன்னவன்
தேவருக் கரசனாய் விசும்பின் மேற்செல'

என்று   இச்செய்தியைக்    குறிப்பிக்கின்றார்    ஆசிரியர்.  உடனே குலோத்துங்கன் சோழநாடடைந்து முடி சூடினன்.

இவன்   தலைநகராகக்   கொண்டு   ஆட்சி  புரிந்த  இடம்,  இவன்
தாய்ப்  பாட்டானாகிய  கங்கைகொண்ட  சோழன்  இயற்றித்  தலைநகராகக்
கொண்டிருந்த  கங்கைகொண்ட  சோழபுரமேயாம் என்று தெரிகிறது.

'கங்கா புரியின் மதிற்புறத்துக்
     கருதார் சிரம்போய் மிகவீழ'

என,  ஆசிரியர்  குறிக்குமாற்றால்  இஃது  உணரப்படுகின்றது.

இவன் அரசு வீற்றிருக்கும்  சிறப்பு, இவன்  காஞ்சியில் செய்தமைத்த
சித்திரமண்டபத்தே வீற்றிருந்த சிறப்புக் கூறிய திறத்தால் ஒருவாறு உணரப்படும்.

இவன் சோழநாட்டினின்றும் காஞ்சி நோக்கிப் புறப்பட்ட சிறப்பு, இவன் பேரரசனாய்த் திகழ்ந்த தன்மையைப் புலப்படுத்தி நிற்கின்றது.

பேரரசனாய்த்   திகழ்ந்த  இவன்  பொழுது  போக்கிய  தன்மையைக்,

'கலையினொடும் கலைவாணர் கவியினொடும்
     இசையினொடும் காதன் மாதர்