(5) கருணாகரன் போர்க்களத்தே முற்பட்டுப் பொருத பொழுது
அவன் போர்க்கு ஆற்றாது அஞ்சிய கலிங்கரின் செய்தி கூறுமிடத்து
'அச்சச்' சுவைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.
‘எதுகொல் இதுஇது மாயை ஒன்றுகொல்
எரிகொல் மறலிகொல் ஊழியின்கடை
அதுகொல் எனஅல றாவிழுந்தனர்
அலதி குலதியோ டேழ்க லிங்கரே’.
|
(6) குலோத்துங்கன் படை தன் நாட்டிற் புகுந்தமையறிந்து கலிங்க
வேந்தன் சினந்து கூறுமிடம் 'வீரச்' சுவை பொருந்தியதாம்.
‘கானரணும் மலையரணும் கடலரணும்
சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தானரணம் உடைத்தென்று கருதாது
வருவதுமத் தண்டு போலும்’.
|
(7) கலிங்கவேந்தன் அச்செய்தியைக் கேள்வியுற்றபொழுது, அவனது
நிலையைக் கூறும் பகுதி 'வெகுளிச்' சுவையில் சிறந்து தோன்றுகின்றது.
'அந்தரமொன் றறியாத வடக லிங்கர்
குலவேந்தன் அனந்த பன்மன்
வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக்
கைபுடைத்து வியர்த்து நோக்கி.'
|
(8) கலிங்கப் போர்க்களத்தே பேய்கள் நிணக்கூழ் அட்டு மகிழ்வுடன்
உண்ணும் செய்தியைக் கூறுமிடத்தே 'உவகைச்' சுவை நிறைந்து
விளங்குகின்றது.
‘ஓடி உடல் வியர்த் துண்ணீரே
உந்தி பறந்திளைத் துண்ணீரே
ஆடி அசைந்தசைந் துண்ணீரே
அற்ற தறஅறிந் துண்ணீரே’
|
இனி, இடத்துக்கேற்ற சந்தம் அமைத்துத் தாம் கூறும் பொருளை
நம்கண் காணுமாறு காட்டும் ஆசிரியரியல்பைக் காண்போம்.
|