அருள்வட்ட மாக அறிவு
கதிராய்ப் பொருள்வட்ட மெல்லாம் விளக்கி--இருள்வட்டம்
மாற்றும் அறிவான ஞான வளரொளியான் வேற்றிலிங் கந்தோன்றும்
வென்று.
1
மாமாங்க மாடல்
மணற்குவித்தல் கல்லிடுதல் தாமோங் குயர்வரைமேற்
சாவீழ்தல்--காமங்கொண் டாடோ டெருமை யறுத்தல் இவையுலக
மூடம் எனவுணரற் பாற்று.
2
சக்கரன் நான்முகன் சங்கரன்
பூரணன் புத்தன் கபிலன் கணாதரனென்--றெத்திறத்
தேகாந்த வாதிக ளெண்கேட்ட ஆதன்போல் ஆகாதாம் ஆத்தன்
றுணிவு.
3
கடம்பன்றான் றன்னொடு
காம்படுதோள் வள்ளி உடம்பினுங் கூட்ட மதுவுவந்து கேட்பர்
கொடுத்துண்மின் கொண்டொழுக்கங் காணுமினென்பார் சொல் அடுப்பேற்றி யாமைதீந் தற்று.
4
நன்ஞான நற்காட்சி
நல்லொழுக்க மென்றிவை தன்னான் முடித்தறா னில்லையேற்
பொன்னேபோல் ஆவட்டஞ் செய்த வணிகலந் தேயகிற்போ
லாய்வட்ட நில்லா துடம்பு.
5
நாலிறகிற் கண்ணில தேயெனினு
நன்பொருளின் பேரிறையா னுண்பெயரிற் பிற்சிறக்கு மோரும்
இருகண் னுளதே யெனினு மதனை வெருண்டு விலங்காமற்
கா.
6
குறிப்பு : இந்த ஆறு செய்யுட்களும்
பொருள் விளங்காமையாற் பிற்சேர்க்கையாக வெளியிடப்பட்டன.
|