|     அருள்வட்ட மாக அறிவு 
	கதிராய்ப்பொருள்வட்ட மெல்லாம் விளக்கி--இருள்வட்டம்
 மாற்றும் அறிவான ஞான வளரொளியான்
 வேற்றிலிங் கந்தோன்றும் 
	வென்று.                 
1
 
    மாமாங்க மாடல் 
	மணற்குவித்தல் கல்லிடுதல்தாமோங் குயர்வரைமேற் 
	சாவீழ்தல்--காமங்கொண்
 டாடோ டெருமை யறுத்தல் இவையுலக
 மூடம் எனவுணரற் பாற்று.                       
2
 
    சக்கரன் நான்முகன் சங்கரன் 
	பூரணன்புத்தன் கபிலன் கணாதரனென்--றெத்திறத்
 தேகாந்த வாதிக ளெண்கேட்ட ஆதன்போல்
 ஆகாதாம் ஆத்தன் 
	றுணிவு.                      
3
 
    கடம்பன்றான் றன்னொடு 
	காம்படுதோள் வள்ளிஉடம்பினுங் கூட்ட மதுவுவந்து கேட்பர்
 கொடுத்துண்மின் கொண்டொழுக்கங் காணுமினென்பார்
 சொல்
 அடுப்பேற்றி யாமைதீந் தற்று.                    
4
 
    நன்ஞான நற்காட்சி 
	நல்லொழுக்க மென்றிவைதன்னான் முடித்தறா னில்லையேற் 
	பொன்னேபோல்
 ஆவட்டஞ் செய்த வணிகலந் தேயகிற்போ
 லாய்வட்ட நில்லா துடம்பு.                       
5
 
    நாலிறகிற் கண்ணில தேயெனினு 
	நன்பொருளின்பேரிறையா னுண்பெயரிற் பிற்சிறக்கு மோரும்
 இருகண் னுளதே யெனினு மதனை
 வெருண்டு விலங்காமற் 
	கா.                      
6
 
குறிப்பு : இந்த ஆறு செய்யுட்களும் 
	பொருள் விளங்காமையாற் பிற்சேர்க்கையாக வெளியிடப்பட்டன.  
 
 |