பக்கம் |
வரி |
|
20 |
157-8 |
'துணைபுண ரன்னத் தூவி யணைமிசைக் |
|
|
கண்படு மெல்லை' |
|
|
“துணைபுண ரன்னத் தூவியிற் செறித்த |
|
|
இணையணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது” |
|
|
(அந்திமாலைச் சிறப்புச்செய்காதை 4, 66-7)
|
38 |
110 |
'வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம் |
|
|
ஓமென வோவிறந் தொலிக்க' |
|
|
“கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்குங் |
|
|
காவிரிப் புதுநீர்க்
கடுவரல் வாய்த்தலை |
|
|
ஓவிறந் தொலிக்கும் ஒலியே யல்லது” |
|
|
(நாடுகாண்காதை 10, 107-109)
|
38 |
118-26 |
'துகிர்க்கா லன்னமும் புகர்க்காற் கொக்கும் |
|
|
செங்கட் போத்துங் கம்புட் கோழியும் |
|
|
கனைகுரல் நாரையும் சினமிகு காடையும் |
|
|
பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும் |
|
|
என்றிவை பலவும் எண்ணில குழீஇச் |
|
|
சிரஞ்சிறி தசைத்துஞ் சிறகை யடித்தும் |
|
|
அந்தியங் காடியின் சந்தங் காட்டித் |
|
|
தத்தங் குழூஉக்குரல் தமைவிரித் தெழுப்பும் |
|
|
பேரொலி யொன்றுமே யார்தரு மொருசார்' |
|
|
“கம்புட் கோழியுங் கனைகுரல் நாரையும் |
|
|
செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும் |
|
|
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும் |
|
|
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் |
|
|
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப் |
|
|
பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்” |
|
|
(நாடுகாண்காதை 10, 114-119)
|
39 |
127-30 |
'வீறுடை எருத்தினம் வரிவரி நிறுத்தி |
|
|
ஈறிலாச் சகரர் எண்ணில ராமெனப் |
|
|
பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப் |
|
|
போற்றிய குரவையே பொலிதரும் ஒருசார்' |
|
|
“பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ |
|
|
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்” |
|
|
(நாடுகாண்காதை 10, 134-135)
|
38 |
91-3 |
'கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக் |
|
|
கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிர |
|
|
மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்' |
|
|
“பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர் |
|
|
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் |
|
|
உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும் |
|
|
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து |
|
|
மங்குல் வானத்து மலையிற் றோன்றும் |
|
|
ஊரிடை யிட்ட நாடுடன் கண்டு” |
|
|
(சிலப்பதிகாரம் : நாடுகாண்காதை-வரி.
148-153)
|
|
|
“விளைவறா வியன்கழனிக் |
|
|
கார்க் கரும்பின் கமழாலைத் |
|
|
தீத்தெறுவிற் கவின்வாடி |
|
|
நீர்ச் செறுவில் நீணெய்தற் |
|
|
பூச்சாம்பும் புலத்தாங்கட் |
|
|
காய்ச்செந்நெற் கதிரருந்தி |
|
|
மோட்டெருமை முழுக்குழவி |
|
|
கூட்டுநிழற் றுயில்வதியும்” |
|
|
(பட்டினப்பாலை : 8-15)
|