| முன்னுரை  
 பேருந்தின் ஊர்ப்பெயர்ப் பலகைகள், 
கடைப்பெயர்ப் பலகைகள், விளம்பரப் பெயர்ப் பலகைகள் முதலானவைகளில் பயன்படுத்தப்படும் 
தமிழில் - திருமண
 அழைப்பிதழ்த் தமிழில் - ஒட்டப்படும் சுவரொட்டித்
தமிழில் - அரசு அலுவலகங்கள்
 பயன்படுத்தும் தமிழில் - அரசு வெளியிடும் பாடநூல் தமிழில் - 
தொடக்கப்பள்ளி
 ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள்
 ஆகியோர்தம்
 தமிழில், சிறந்த திறனாய்வாளர்கள் எனப் புகழப்படுவோரின் தமிழில் -
 முனைவர் பட்டம்
வழங்கப்பட்ட ஆய்வேடுகளில் - தமிழ் வாழ்க என உணர்வு
 பொங்க எழுதுவோரின் தமிழில்
 - செய்திப் பத்திரிகைகள், இலக்கியப் பத்திரிகைகள்
 எழுதி வெளியிடும் தமிழில் - இலக்கியப்
 படைப்பாளிகளின் தமிழில் என
 அங்கிங்கெனாதபடி பிறந்து வளர்ந்து செழித்திருக்கும்
 தவறுகள் மலிவோ மலிவு.
 
பலர், அரசியல் அறிவும் ஆங்கில அறிவும் பொது அறிவும் பெற்றிருந்தாலும், தமிழ்த்தேர்ச்சியின்மையால்,
நாளிதழ்களிலும் வார மாத ஏடுகளிலும் நல்ல
 தமிழ் எழுத இயலாதவர்களாய் இருப்பதைக் காண்கிறோம்.
பிழையில்லாமல் நான்குவரி தமிழ் எழுதக்கூடியவர் ஆயிரத்தில் ஒருவராவது இருப்பாரா என்ற ஐயம் எழுகிறது
பிழை திருத்தும்போதே பிழை
	தமிழ் வாழுமாறு நாம் வாழவேண்டும்
நம் மொழியார்வம் மொழிப்பற்று யாவும் செயல் வடிவம் பெறவேண்டும் 
 - தமிழண்ணல் |